ஓரணியில் இந்தியா, சீனா.. அதிர்ந்த அமெரிக்கா - ரஷியாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் ஒரே முடிவு
வாஷிங்டன்: உக்ரைனின் 4 மாகாணங்களை தங்கள் நாட்டுடன் இணைக்கும் ரஷியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்திலிருந்து இந்தியா, சீனா ஆகிய நாடுகள் விலகின.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் படையெடுப்பை தொடங்கிய ரஷியா, இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுத்துவிடாமல் நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி வருகிறது.
சுமார் 7 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. மக்கள் வாழும் நிலை பல நகரங்கள் இழந்துவிட்டன.

உருக்குலைந்த உக்ரைன்
பல லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனைவிட்டு அகதிகளாக வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர். உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இருப்பினும் ரஷியாவும் தனது முடிவிலிருந்து பின்வாங்காமல் தாக்குதலை தொடர்கிறது.

4 மாகாணங்கள்
7 மாதங்கள் தொடர் தாக்குதல்களை நடத்திய பிறகும் உக்ரைனை முழுமையாக ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் உக்ரைன் இன்னும் தாக்குபிடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் இருக்கும் டொனெட்ஸ், லுஹான்ஸ், கெர்சன், ஜபொரிஸ்யா ஆகிய 4 மாகாணங்களை ரஷ்யாவில் இணைக்க முடிவு செய்த விளாதிமிர் புதின் இதற்காக வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார்.

ஐநா கண்டனம்
ரஷ்யாவின் இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "ஒரு நாடு பிற நாட்டை அச்சுறுத்தியோ அல்லது தங்களின் பலத்தை பயன்படுத்தியோ தங்களோடு இணைத்துக்கொள்வது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இதனை மக்களின் விருப்பமாக ஏற்க முடியாது." என்று தெரிவித்துள்ளார்.

கண்டன தீர்மானம்
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ரஷியாவின் இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் கண்டன தீர்மானம் கொண்டு வந்தன. ரஷியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், உக்ரைன் எல்லையில் ரஷியா செய்த மாற்றங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியா புறக்கணிப்பு
நேற்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அமெரிக்கா, அல்பேனியாவின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து 10 நாடுகள் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பிரேசில், கபான் ஆகிய நாடுகள் விலகுவதாக அறிவித்தன. உக்ரைனில் நடந்துவரும் சம்பவங்கள் வருத்தம் தருவதாகவும், உயிர்களை எடுப்பது எதற்கும் தீர்வு கிடையாது என்றும் இந்தியா தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
-
அமெரிக்காவின் பிரம்மாஸ்திரம் எல்லாம் காலி! இப்படித்தான் வீழ்த்தணும்! உலகிற்கே பாடம் எடுக்கும் ஈரான் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications