ஓரணியில் இந்தியா, சீனா.. அதிர்ந்த அமெரிக்கா - ரஷியாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் ஒரே முடிவு
வாஷிங்டன்: உக்ரைனின் 4 மாகாணங்களை தங்கள் நாட்டுடன் இணைக்கும் ரஷியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்திலிருந்து இந்தியா, சீனா ஆகிய நாடுகள் விலகின.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் படையெடுப்பை தொடங்கிய ரஷியா, இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுத்துவிடாமல் நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி வருகிறது.
சுமார் 7 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. மக்கள் வாழும் நிலை பல நகரங்கள் இழந்துவிட்டன.

உருக்குலைந்த உக்ரைன்
பல லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனைவிட்டு அகதிகளாக வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர். உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இருப்பினும் ரஷியாவும் தனது முடிவிலிருந்து பின்வாங்காமல் தாக்குதலை தொடர்கிறது.

4 மாகாணங்கள்
7 மாதங்கள் தொடர் தாக்குதல்களை நடத்திய பிறகும் உக்ரைனை முழுமையாக ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் உக்ரைன் இன்னும் தாக்குபிடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் இருக்கும் டொனெட்ஸ், லுஹான்ஸ், கெர்சன், ஜபொரிஸ்யா ஆகிய 4 மாகாணங்களை ரஷ்யாவில் இணைக்க முடிவு செய்த விளாதிமிர் புதின் இதற்காக வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார்.

ஐநா கண்டனம்
ரஷ்யாவின் இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "ஒரு நாடு பிற நாட்டை அச்சுறுத்தியோ அல்லது தங்களின் பலத்தை பயன்படுத்தியோ தங்களோடு இணைத்துக்கொள்வது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இதனை மக்களின் விருப்பமாக ஏற்க முடியாது." என்று தெரிவித்துள்ளார்.

கண்டன தீர்மானம்
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ரஷியாவின் இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் கண்டன தீர்மானம் கொண்டு வந்தன. ரஷியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், உக்ரைன் எல்லையில் ரஷியா செய்த மாற்றங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியா புறக்கணிப்பு
நேற்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அமெரிக்கா, அல்பேனியாவின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து 10 நாடுகள் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பிரேசில், கபான் ஆகிய நாடுகள் விலகுவதாக அறிவித்தன. உக்ரைனில் நடந்துவரும் சம்பவங்கள் வருத்தம் தருவதாகவும், உயிர்களை எடுப்பது எதற்கும் தீர்வு கிடையாது என்றும் இந்தியா தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
-
அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவுக்கு 7 பெரும் சவால்கள்! அபாய மணியடிக்கும் வளைகுடா -
ஈரானிடம் இருக்கும் செக் பாயிண்ட்.. ஹார்மூஸ் மூடும் டிரம்பின் முடிவுக்கு சவுதி அரேபியா கடும் எதிர்ப்பு? -
மேற்காசிய போருக்கு நடுவே.. திடீரென பிரதமர் மோடிக்கு போன் போட்ட டிரம்ப்.. ஆலோசித்தது என்ன? -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல்












Click it and Unblock the Notifications