மீண்டும் மீண்டும் சிக்கல்.. நாசாவின் ஆர்ட்டெமிஸ் ராக்கெட் ஏவுவது.. 2ஆவது முறையாக தள்ளிவைப்பு!
வாஷிங்டன்: நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் ராக்கெட்டின் லான்ச் இரண்டாவது முறையாகக் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
உலகெங்கும் விண்வெளி குறித்த ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விண்வெளி ஆய்வில் முன்னோடி என்று நாம் நாசாவை சொல்லலாம்.
விண்வெளியில் நிலவு தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் நாசா மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே 1969இல் நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்து இருந்தது.

ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்
இந்தச் சூழலில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே விஷயத்தை நாசா கையில் எடுத்துள்ளது. மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ள நாசா, இதற்காகப் பலகட்ட சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாகச் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் சோதனை கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. நிலவு குறித்த ஆய்வில் இது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

முதற்கட்ட சோதனை
குறிப்பாக மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்வதில் இது முதல் படியாக இருக்கும் எனக் கூறப்பட்டது. அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்ல முடியும். இருப்பினும், கடந்த வாரமே நடக்க இருந்த முதற்கட்ட சோதனை கடைசி நிமிடத்தில் கைவிடப்பட்டது. திரவ ஹைட்ரஜனையும் திர ஆக்சிஜனையும் இணைக்கும் பகுதியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ராக்கெட் லான்ச் தள்ளி வைக்கப்பட்டது.

கைவிடப்பட்டது
இந்தச் சூழலில் இரண்டாவது முறையாக இன்று அந்த ராக்கெட் சோதனை செய்யப்பட இருந்தது. இதற்கான கவுன்டவுன்கள் தொடங்கப்பட்டு, ராக்கெட் விண்ணில் சீறிப் பாய தயாராக இருந்தது. அப்போது ரக்கெட் புறப்படக் கொஞ்ச நேரம் மட்டுமே இருந்த நிலையில், ராக்கெட் லான்ச் இரண்டாவது முறையாகக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ராக்கெட்டில் கண்டறியப்பட்ட எரிபொருள் கசிவே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

என்ன காரணம்
ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் குளிர்ந்த நிலையில் இருக்கும் திரவ ஹைட்ரஜன் உள்ள பகுதியில் ஏற்பட்ட கசிவே ராக்கெட் லான்ச் கைவிடக் காரணம் ஆகும். இதைச் சரி செய்யும் பணிகளில் நாசா பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் சோதனை வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனையாகப் பார்க்கப்படுகிறது. இதை நேரில் காணப் பல ஆயிரம் பேர் கூடி இருந்தனர்.

அடுத்த சோதனை எப்போது
ராக்கெட் சோதனை நடைபெறாமல் போனதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரம், அடுத்து இந்த ராக்கெட் மீண்டும் எப்போது விண்வெளியில் ஏவப்படும் என்பது குறித்த நாசா எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் மீண்டும் ராக்கெட் சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications