மீண்டும் மீண்டும் சிக்கல்.. நாசாவின் ஆர்ட்டெமிஸ் ராக்கெட் ஏவுவது.. 2ஆவது முறையாக தள்ளிவைப்பு!
வாஷிங்டன்: நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் ராக்கெட்டின் லான்ச் இரண்டாவது முறையாகக் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
உலகெங்கும் விண்வெளி குறித்த ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விண்வெளி ஆய்வில் முன்னோடி என்று நாம் நாசாவை சொல்லலாம்.
விண்வெளியில் நிலவு தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் நாசா மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே 1969இல் நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்து இருந்தது.

ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்
இந்தச் சூழலில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே விஷயத்தை நாசா கையில் எடுத்துள்ளது. மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ள நாசா, இதற்காகப் பலகட்ட சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாகச் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் சோதனை கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. நிலவு குறித்த ஆய்வில் இது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

முதற்கட்ட சோதனை
குறிப்பாக மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்வதில் இது முதல் படியாக இருக்கும் எனக் கூறப்பட்டது. அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்ல முடியும். இருப்பினும், கடந்த வாரமே நடக்க இருந்த முதற்கட்ட சோதனை கடைசி நிமிடத்தில் கைவிடப்பட்டது. திரவ ஹைட்ரஜனையும் திர ஆக்சிஜனையும் இணைக்கும் பகுதியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ராக்கெட் லான்ச் தள்ளி வைக்கப்பட்டது.

கைவிடப்பட்டது
இந்தச் சூழலில் இரண்டாவது முறையாக இன்று அந்த ராக்கெட் சோதனை செய்யப்பட இருந்தது. இதற்கான கவுன்டவுன்கள் தொடங்கப்பட்டு, ராக்கெட் விண்ணில் சீறிப் பாய தயாராக இருந்தது. அப்போது ரக்கெட் புறப்படக் கொஞ்ச நேரம் மட்டுமே இருந்த நிலையில், ராக்கெட் லான்ச் இரண்டாவது முறையாகக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ராக்கெட்டில் கண்டறியப்பட்ட எரிபொருள் கசிவே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

என்ன காரணம்
ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் குளிர்ந்த நிலையில் இருக்கும் திரவ ஹைட்ரஜன் உள்ள பகுதியில் ஏற்பட்ட கசிவே ராக்கெட் லான்ச் கைவிடக் காரணம் ஆகும். இதைச் சரி செய்யும் பணிகளில் நாசா பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் சோதனை வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனையாகப் பார்க்கப்படுகிறது. இதை நேரில் காணப் பல ஆயிரம் பேர் கூடி இருந்தனர்.

அடுத்த சோதனை எப்போது
ராக்கெட் சோதனை நடைபெறாமல் போனதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரம், அடுத்து இந்த ராக்கெட் மீண்டும் எப்போது விண்வெளியில் ஏவப்படும் என்பது குறித்த நாசா எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் மீண்டும் ராக்கெட் சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
-
விண்வெளியில் பறிபோன பேச்சு திறன்.. நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications