"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்கப் படைகள் முதலில் கியூபாவில் இறங்கி அந்நாட்டின் அதிபர் மதுரோவை கைது செய்தது. அடுத்து இப்போது ஈரானில் 4 வாரங்களாகப் போரை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், டிரம்ப் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அடுத்து கியூபா தான் எனச் சொல்லியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபராகக் கடந்தாண்டு ஜனவரியில் பதவியேற்ற டிரம்ப் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருகிறார். கடந்தாண்டு முழுக்க டிரம்பின் வரி விவகாரமே மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையே அடுத்து இந்தாண்டு முழுக்க அவர் ஒவ்வொரு நாட்டிலும் சென்று பிரச்சினை செய்து வருகிறார்.

அமெரிக்கா
முதலில் கடந்த ஜனவரி மாதம் வெனிசுலாவில் இறங்கிய அமெரிக்க ராணுவம் அந்நாட்டின் அதிபர் மதுரோவை கைது செய்தார். அடுத்து பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது போரை ஆரம்பித்தார். இந்த போர் சில நாட்களில் முடியும் என டிரம்ப் நினைத்த சூழலில், ஈரானின் பதிலடிகளால் ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்கிறது. இந்த பரபரப்புகளே முடியாத நிலையில், அவர் வேறு ஒரு சர்ச்சை கருத்தைக் கூறியுள்ளார்.
கியூபா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மியாமியில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது வெனிசுலா மற்றும் ஈரானில் அமெரிக்க ராணுவம் வெற்றி அடைந்ததாகச் சொல்லிய டிரம்ப்ஸ அடுத்து கியூபா தான் எனக் குறிப்பிட்டார். கியூபாவின் ஹவானா அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியால் சரிவின் விளிம்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், கியூபாவுக்கான அவரது திட்டங்களை அவர் வெளிப்படையாக விளக்கவில்லை.
டிரம்பின் நிர்வாகம் அண்மைய வாரங்களாகக் கியூபா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வருகிறது. மேலும், அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கச் சாத்தியம் இருப்பதாகவும் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். ஏற்கனவே, டிரம்ப் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் கொந்தளிப்பான ஒரு சூழல் இருக்கிறது. இந்த நேரத்தில் அடுத்து மீண்டும் ஒரு ராணுவ நடவடிக்கை என ஆரம்பித்தால் தேவையில்லாத குழப்பங்களே ஏற்படும்.
அடுத்து கியூபா தான்
இது தொடர்பாக டிரம்ப் மேலும் பேசுகையில், "நான் தான் இந்த மகத்தான ராணுவத்தை உருவாக்கினேன். உலகின் மிகச் சிறந்த ராணுவம் இருப்பதால் இதைப் பயன்படுத்தாமலேயே உங்களால் வெல்ல முடியும். ஆனாலும் சில சமயங்களில் நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். நமது அடுத்த இலக்கு கியூபா தான்" என்று அவர் பேசினார். அத்தோடு நிற்காமல், "நான் எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றே நினைத்துக் கொள்ளுங்கள்" என்று மேலும் புரியாமல் பேசி குழப்பினார்.
இதற்கிடையே, ராணுவ மோதலைத் தடுக்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் கியூபா ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் ஒப்புக்கொண்டார். மின் உற்பத்தி, போக்குவரத்திற்கான எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட தடங்கல்களால் கியூபாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டம் போடும் அமெரிக்கா
கடந்த ஜனவரியில் வெனிசுலா நாட்டில் இறங்கி அமெரிக்கப் படைகள் அந்நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மடூரோவை கைது செய்தது. அதற்கு முன்பு வரை கியூபாவுக்கு தேவையான பெரும்பாலான கச்சா எண்ணெய் தேவையை வெனிசுலாவே பூர்த்தி செய்து வந்தது. ஆனால், வெனிசுலா அதிபரை அமெரிக்கா கைது செய்தவுடன் நிலைமை மாறியது. அமெரிக்காவின் அழுத்தத்தால் புதிய வெனிசுலா அரசு கியூபாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்புவதை நிறுத்தியது. இதுவே கியூபாவின் நிலைமையை மோசமாக்கியது. கியூபா மிக மோசமான சூழலில் இருக்கும் நிலையில் தான், அடுத்த டார்கெட் கியூபா என்பது போல டிரம்ப் கூறியிருக்கிறார்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications