Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணத்தை அள்ளி ஈர்க்க.. வீட்டில் மகாலட்சுமியை நிரந்தரமாக தங்க வைக்க.. இதை செய்யுங்க, அப்புறம் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

மதுரை: பணம் இன்றைக்கு அனைவருக்குமே தேவையான ஒன்று. மனிதர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பணம்தான் முக்கியமானதாக உள்ளது. பணம் சிலரிடம் தேவைக்கு மேல் உள்ளது. சிலருக்கோ வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது. பலருக்கும் பணத்தை சம்பாதிக்கும் வழி தெரிந்த அளவிற்கு அதை தம்முடனேயே தக்க வைக்கும் வழி தெரியாமல் உள்ளது. எனவே பணத்தை ஈர்க்கவும் அதை தக்கவைக்கும் சில பரிகாரங்களை செய்வது அவசியம்.

ஒவ்வொரு மனிதர்களும் ஆரோக்கியமான, வளமான மற்றும் திருப்தியான வாழ்க்கையை வாழ பணம் நிச்சயமாகத் தேவை. சில நேரங்களில், கடினமாக உழைத்த பிறகும், மக்கள் இன்னும் அவர்கள் விரும்பும் செல்வத்தை ஈர்க்கத் தவறிவிடுகிறார்கள்.

பலவிதமான முயற்சிகளுக்குப் பிறகும், நீங்கள் சம்பாதித்த பணம் வீட்டில் தங்கவில்லை என்றால், உங்களுக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடு இருந்தால், பணப் பற்றாக்குறையைப் போக்க சில பரிகாரங்கள் உள்ளன அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.. பணம் உங்கள் பீரோவில் தங்கும். செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியை நிரந்தரமாக வீட்டில் தங்க வைக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

ஈசான்ய மூலை

ஈசான்ய மூலை

நமது வீட்டில் வடகிழக்கு பகுதியான ஈசான்ய மூலையை சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஜோதிட சாஸ்திரப்படி, வீட்டின் வடகிழக்கு மூலை மிகவும் புண்ணிய ஸ்தலமாகும், அதனால்தான் இங்கு பூஜை அறை கட்ட அறிவுறுத்தப்படுகிறது. வடகிழக்கு மூலை பகுதியை மறந்தும் கூட குப்பைகளை குவித்து வைக்க வேண்டாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சி, அமைதி நிலைத்திருக்கும். செல்வம் பல வழிகளில் இருந்தும் வந்து சேரும்.

முள் செடிகளை வளர்க்க வேண்டாம்

முள் செடிகளை வளர்க்க வேண்டாம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி வீட்டிற்குள் முட்கள் அல்லது பால் சுரக்கும் மற்றும் விஷ மரங்களை நடக்கூடாது. அத்தகைய தாவரங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கும் செல்வத்திற்கும் நல்லதல்ல என்று நம்பப்படுகிறது. தெரியாமல் முள் மரங்களையோ, செடிகளையோ வளர்த்து வந்தால் அவற்றை வெட்டி எறிந்து விடுவது நல்லது.

குளியலறையை மூடியே வைக்கவும்

குளியலறையை மூடியே வைக்கவும்

ஒரு சிலர் தங்கள் வீட்டின் குளியலறை, கழிப்பறை திறந்து வைத்திருப்பார்கள். குளியலறை மற்றும் கழிப்பறையை எப்போதும் மூடியே வைக்கவும் ஏனெனில் இது உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் நிதி நிலையையும் பாதிக்கிறது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் குளியலறை மற்றும் கழிப்பறையின் கதவுகளை மறந்த பிறகும் திறந்து வைக்காதீர்கள்,

மகாலட்சுமியின் அம்சம் விளக்குமாறு

மகாலட்சுமியின் அம்சம் விளக்குமாறு

ஜோதிட சாஸ்திரத்தின்படி விளக்குமாறு மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டிற்குள் கூட்டும் விளக்குமாறு எப்போதும் மறைத்து வைக்கப்பட வேண்டும். துடைப்பத்தை செல்வம் அல்லது வழிபாட்டு தலத்திற்கு அருகில் வைக்க மறக்காதீர்கள்.

செல்வத்தை பெருக்கும் குபேர வழிபாடு

செல்வத்தை பெருக்கும் குபேர வழிபாடு

உங்கள் வீட்டிற்கு பணம் வந்தாலும் அது நிலைக்காது என்று நீங்கள் உணர்ந்தால். பணம் வந்தவுடனேயே செலவாகிவிட்டால், உங்கள் செல்வத்தை நிரப்ப, குபேரனின் புகைப்படம் அல்லது சிலையை வீட்டில் வைக்கவும். செல்வத்தின் கடவுளான குபேர புகைப்படம் அல்லது சிலையை வீட்டின் வடக்கு திசையில் வைத்து தினமும் வழிபட வேண்டும். இதனுடன், குபேரனின் யந்திரத்தை உங்கள் வீட்டின் பீரோவில் வைத்து தினமும் வழிபடலாம். இந்த பரிகாரத்தாலும் உங்கள் செல்வம் நாளுக்கு நாள் பல மடங்கு பெருகும்.

பணப் பிரச்சனை தீரும்

பணப் பிரச்சனை தீரும்

உங்களுடைய வீட்டில் பணம் தங்கவில்லை என்றாலோ..நிதி சிக்கல் ஏற்பட்டாலோ, கடன் பிரச்சினை வந்தாலோ அதை சமாளிக்க கல் உப்பு சிறந்த பரிகாரமாக உள்ளது. கல் உப்பை உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் ஒரு சிறிய பாத்திரத்தில் வைக்கவும். வாரம் ஒருமுறை கல் உப்பை மாற்றிக்கொண்டே இருங்கள். நிதி சிக்கல் விரைவில் தீரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+