சென்னை டூ கோவை.. விமானத்தில் வந்த 24வயது பயணிக்கு கொரோனா.. 93 பேர் விமானத்தில் இருந்ததால் அதிர்ச்சி
கோவை: விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய முதல் நாளில் சென்னையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் சென்ற 24 வயது பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

அவரோடு சேர்ந்த பயணித்த மேலும் சில பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி இன்னும் சில பயணிகளின் சோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த 25ம் தேதி 93 பயணிகள் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்திருந்தனர். இதில் பயணித்த 24 வயது பயணிக்கு கோவையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யாரும் அமரவில்லை
இதைத் தொடர்ந்து, இந்த விஷயத்தில் இண்டிகோ நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் " நோயாளி தற்போது கோயம்புத்தூரில் உள்ள இஎஸ்ஐ மாநில மருத்துவ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்ற பயணிகளைப் போலவே முகமூடி, முகம் கவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கொண்டு அவர் விமானத்தில் விமானத்தில் அமர்ந்திருந்தார். கூடுதலாக, அவருக்கு அருகில் வேறு யாரும் அமரவில்லை, இதனால் பரவுவதற்கான சாத்தியத்தை கணிசமாகக் குறைத்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

93 பேரும் தனிமையில்
இதற்கிடையே 24 வயது பயணியுடன் பயணித்த அனைத்து பயணிகளும் 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாவும்,. அரசாங்க வழிகாட்டுதல்களின்படி மற்ற பயணிகளுக்கு கொரோனா தொற்று குறித்த தகவலை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனிமை முகாம் கட்டாயம்
இதனிடையே கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள கோவை விரைவில் பசுமை மண்டலமாக மாறவிருந்தது, இந்த சூழலில் கோயம்புத்தூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் -பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அனைத்து பயணிகளும் கொரோனா வைரஸுக்கு சோதிக்கப்படுவார்கள் என்றும் முடிவுகள் வெளிவரும் வரை, அவர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தலுக்கோ அல்லது ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கோ தேர்வு செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் பயணித்தவர்
இதனிடையே ஏர் இந்தியாவின் டெல்லி-லூதியானா விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த அனைவரும் தனிமை படுத்துதல் முகாமில் வைக்கப்பட்டனர். அடுத்தடுத்து விமானத்தில் பயணித்த இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது மற்ற பயணிகளிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications