மகனின் அமைச்சர் பதவிக்கு ஆப்பு வைக்க ‘கள்ளக் காதலை’ கசியவிட்ட தந்தை! கேரளாவில் பரபரப்பு!!
திருவனந்தபுரம்: கேரள மாநில அரசியலில் பாலியல் ரீதியான சர்ச்சைகள் ஓய்ந்துவிடாது போல்.. இப்போது அமைச்சர் கிருஷ்ணகுமாரின் பதவிக்கு ‘கள்ளக் காதல்' விவகாரம் வேட்டு வைக்க இருக்கிறது.. இதில் வேடிக்கை என்னவெனில் கிருஷ்ணகுமாரின் பதவியை பறிக்க கள்ளக் காதல் விவகாரத்தை கிளப்பிவிட்டவர் அவரது தந்தைதான்!
கேரள மாநில காங்கிரஸ் பி என்ற கட்சியின் தலைவர் பாலகிருஷ்ணபிள்ளை. இடமலையார் நீர் மின் திட்ட ஊழலில் சிக்கியவர். இதனால் கடந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக மகன் கிருஷ்ணகுமாரை நிறுத்தி அமைச்சர் பதவியும் வாங்கிக் கொடுத்தார். பின்னர் அப்பா பாலகிருஷ்ணபிள்ளைக்கும் மகன் அமைச்சர் கிருஷ்ணகுமாருக்கும் இடையே முட்டல் மோதல் வெடித்தது. கிருஷ்ணகுமரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணபிள்ளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கேரள பத்திரிகைகளில் ஒரு பரபரப்பான செய்தி வெளியானது. அதில் கேரள அமைச்சர் ஒருவரை அவரது கள்ளக் காதலியின் கணவன் நள்ளிரவு நேரத்தில் நையப்புடைத்துவிட்டார் என்பதுதான். ஆனால் அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு செய்தி வெளியாகவில்லை. இதனால் அவரா? இவரா? என்ற ‘விரிவான' அலசல் நடந்து கொண்டிருந்தது.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அரசு கொறாடா ஜார்ஜ், பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பவர் அமைச்சர் கணேஷ்குமார். பத்திரிகையில் எந்த அமைச்சர் என்று குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளனர். இதனால் அமைச்சர்கள் அனைவர் மீதும் சந்தேக நிழல்படியும். இதனால்தான் உண்மையை சொன்னேன். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
ஆனால் இதை நிராகரித்திருக்கும் கணேஷ்குமார், ஜார்ஜ் சொல்வது அப்பட்டமான பொய். அவர் மீது வழக்கு போடப்படும் என்றார்.
கொறாடா ஜார்ஜ், கணேஷ்குமாரின் தந்தை பாலகிருஷ்ணபிள்ளையின் மிக நெருங்கிய நண்பர் என்பதால் மகன் சம்பந்தப்பட்ட கள்ளக் காதல் விவகாரத்தை அவரே கிளப்பிவிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.!
என்ன அரசியலோ? என்ன குடும்பமோ?
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications