நடிகை கௌசல்யாவின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா? பலருக்கும் தெரியாத மற்றொரு பக்கம்
சென்னை: வெள்ளி திரையில் பலருக்கும் பரீட்சையமான கெளசல்யா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் அவரைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் பல வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்த கௌசல்யா சுந்தரியை மிரட்டி அவருடைய திறமையை கொண்டு வரும் ஒரு கேரக்டராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

நிஜப் பெயர் கவிதா
எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் நடிகை கௌசல்யா வெள்ளி திரையில் கதாநாயகியாக இருக்கும்போது இருந்த அதே அழகு அப்படியே மெயின்டனன்ஸ் பண்ணி கொண்டு இருக்கிறார். இவருக்கு மட்டும் வயது ஆகவில்லையா? என்று பார்ப்பவர்கள் கேட்கும் வகையில் தான் இவருடைய அழகு இப்பவும் குறையாமல் இருந்து வருகிறது. கௌசல்யாவின் சொந்த பெயர் அவருடைய வீட்டில் வைத்த பெயர் கவிதா தானாம். அவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் முதல் திரைப்படத்தில் இவர் நந்தினி என்று கேரக்டரில் நடித்ததால் இவரை நந்தினி என்றுதான் அழைத்து வருகிறார்களாம்.

நடிகர் முரளியுடன் முதல் திரைப்படம்
அதே நேரத்தில் தமிழில் இவர் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க எனும் திரைப்படத்தில் இவர் கௌசல்யா எனும் கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் பலரும் கௌசல்யா என்று அழைத்து வருகிறார்கள். முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத அளவில் இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக இவர் விஜய் கூட இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். விஜய்யுடன் கதாநாயகியாக நடித்த நிலையில் ஒரு சில வருடங்களில் விஜய்க்கு அக்காவாகவும் அண்ணியாகவும் நடிக்க தொடங்கி விட்டார். அது மட்டும் இல்லாமல் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்தாலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

திடீரென ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை
இந்த நிலையில் திடீரென சினிமா உலகை விட்டு இவர் சில நாட்கள் விலகியே இருந்திருக்கிறார். அப்போது வெளியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகும் வகையில் தான் இருந்திருக்கிறது. உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத வகையில் இவர் இருந்திருக்கிறார். இவர் திடீரென உடல் எடை கூடுவதற்கு காரணம் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் இவர் எடுத்த மெடிசின் தானாம். அதனால் உடல் எடை திடீரென அதிகரித்து விட்டதாம். அந்த நேரத்தில் இவர் 105 கிலோ வரைக்கும் இருந்தாராம். அதற்குப் பிறகு மீண்டும் முயற்சி எடுத்து பழைய நிலைக்கு வந்து பூஜை திரைப்படத்தில் விஷாலுக்கு சித்தியாக இவர் நடித்திருக்கிறார்.

மோட்டிவேஷன் கொடுக்கும் நபர்
தற்போது இவர் ஒரு நடிகையாகவும், பலருக்கு ஹெல்ப் செய்யும் ஒரு நபராகவும் இருந்து வருகிறாராம். ஆனால் இவர் இப்ப வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருந்து வருகிறாராம். இந்த நிலையில் தான் எவ்வளவு எடை அதிகரித்து இருந்தாலும் என்னால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடிந்தது. உங்களால் ஏன் முடியாது என்று பலருக்கு முன்மாதிரியாகவும் இவர் இருந்து வருகிறாராம். என்னுடைய திரைப்பட வாழ்க்கைக்காகத்தான் நான் மீண்டும் உடல் எடையை குறைத்தேன் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனாலும் உடல் எடையை குறைத்து பிறகு ஆரோக்கியமும் அதில் அடங்கி இருக்கிறது இந்த நாள் அதை நீங்களும் செய்யலாம் என்று பலருக்கு கூறி வருகிறார் .இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் பல வருடங்களுக்குப் பிறகு சுந்தரி சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த சீரியலில் சுந்தரிக்கு தைரியம் ஊட்டி அவருடைய வெற்றிப் பாதையில் பயணிக்க வைப்பதற்காக ஒரு கேரக்டராக இவரும் வந்திருக்கிறார் .இவர் வந்த பிறகு இந்த சீரியலில் விறுவிறுப்பு அதிகரித்து இருப்பாதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications