Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பா மீது சத்தியம் செய்த அக்ஷரா..காரணம் இதுதானா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோபத்தின் உச்சத்தில் அக்ஷரா செய்த செயல் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ராஜுவுக்கும், அக்ஷராவுக்கு ஏற்பட்ட தகராறில் அக்ஷரா பேசிய வார்த்தையை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

டாஸ்க்கை சீரியஸாக எடுத்துக்கொண்ட அக்ஷராவுக்கு அட்வைஸ் குவிந்து வருகிறது.

விளையாட்டை தொடங்கிய ராஜு

விளையாட்டை தொடங்கிய ராஜு

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒவ்வொரு டாஸ்க்கிலும் ஒரு சில பிரச்சனைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து விடுகிறது. ஒவ்வொரு சீசனிலும் இது தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஐந்தாவது சீசனில் தற்போதைய போட்டியாளர்கள் நடந்துகொள்வது ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. இதுவரைக்கும் விளையாட்டுகளில் அமைதியான முறையிலும், கலகலப்பாகவும் விளையாடி வந்த ராஜு தற்போது விளையாட்டை வெறித்தனமாக விளையாடத் தொடங்கி உள்ளார். அதனால் பாதிக்கப்பட்டுள்ளது அக்ஷரா தான்.

ராஜுவின் பஞ்ச் வசனம்

ராஜுவின் பஞ்ச் வசனம்

நேற்றைய எபிசோட்டில் அக்ஷரா தன்னுடைய விளையாட்டை எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று வெறித்தனமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது நான் என்னுடைய விளையாட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடுவேன் என்று ராஜுவும் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தார். என்னிடம் பாசமாக கேட்டால் கூட நான் விட்டுவிடுவேன் ஆனால் அதிகாரத்தில் கேட்டால் நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று பஞ்ச் வசனம் பேசி ராஜு பட்டையைக் கிளப்பிவிட்டார்.

காரசாரமான வாக்குவாதம்

காரசாரமான வாக்குவாதம்

இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து ராஜுவை பார்க்கும் போது என்னுடைய அண்ணனைப் போன்று உள்ளது என்று பாசமாகவும், உருக்கமாகவும் இருந்து அக்ஷரா நேற்றைய எபிசோடுகளில் இனிமேல் உன் முகத்தை நான் ஒருபோதும் பார்க்கவே மாட்டேன் என்று காரசாரமாக கூறியுள்ளார். ரசிகர்கள் அண்ணா என்று கூறிய வாயால் இப்படி எல்லாம் பேசலாமா என்று அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விளையாட்டை விளையாட்டாக நினைக்காமல் அக்ஷரா கோபத்தின் உச்சத்தில் செய்வதை பார்த்து பல ரசிகர்கள் முகம் சுளித்து வருகின்றனர்.

அக்ஷராவின் சத்தியம்

அக்ஷராவின் சத்தியம்

போன வாரத்தில் பாவனி மற்றும் ராஜூ இடையே ஏற்பட்ட பிரச்சனையை பற்றி கமல் பேசியது போல இந்த வாரம் ராஜீ மற்றும் அக்ஷரா இடையில் ஏற்பட்ட பிரச்சனையை பற்றி பேசுவாரா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கோபத்தில் ஆக்ரோஷமாக வார்த்தைகளை வீசிக்கொண்டிருக்கும் அக்ஷராவை ஆரம்பம் முதலே தட்டி வைக்காததால் தான் இவர் இந்த அளவிற்கு வந்துள்ளார் என்று ரசிகர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராஜுவின் மீது கோபத்தில் தன்னுடைய தந்தையின் மீது சத்தியம் செய்து என் வாழ்க்கையில் உன் முகத்தை பார்க்கவே மாட்டேன் என்று கூறியதை பார்த்து பல மீம்ஸ்க்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+