Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணம்மாவின் புது சபதம்....மீண்டும் தொடங்கிட்டாங்கப்பா...ஒரு வழியா முடிவு தெரிய போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலின் இந்த வார விறுவிறுப்பான கதைக்களம் மொத்த கதையும் மாற்றி அமைக்கப் போகிறது.

ஒரு சில வாரங்கள் காதல் காட்சிகளோடு வலம் வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மீண்டும் தற்போது கண்ணம்மாவின் புது சபதத்தால் விறுவிறுப்பு கூடியிருக்கிறது.

மீண்டும் பழையபடி மாறிய பாரதி

மீண்டும் பழையபடி மாறிய பாரதி

பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு சில வாரங்கள் பாரதி திருந்தியது போல இருந்தாலும் தற்போது மீண்டும் அவருடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார். இவருக்கு வேற வேலையே இல்லையா?? அல்லது இப்படித்தான் எப்போதும் இருப்பாரா?? என்று நெட்டிசன்கள் பாரதியை கலாய்த்து வருகிறார்கள். என்ன தான் இவருக்கு புரியும்படி பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருந்தாலும் பாரதி மீண்டும் தன்னுடைய முடிவில் வந்து நிற்பதை பார்த்ததும் எப்போதும் போல நெட்டிசன்கள் பாரதியை சமூக வலைத்தளத்தில் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

நீதிமன்றத்தின் அறிவுரை

நீதிமன்றத்தின் அறிவுரை

பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்ததால் இவர்கள் இருவரும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்று கோர்ட் அறிவுறுத்தியிருந்தது. இதில் ஆரம்பத்திலிருந்து நடக்கும் செயல்களால் கண்ணம்மாவின் மீது தவறு இல்லை என்பதை உணர்த்திக் கொண்டிருக்கும் செயல்களால் பாரதி திருந்தி விடுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு பாரதியின் செயல்பாடு வழக்கம்போல வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் பெட்டியை தூக்கிய கண்ணம்மா

மீண்டும் பெட்டியை தூக்கிய கண்ணம்மா

கடந்த வாரம் முழுக்க இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் எப்போதும் போல கண்ணம்மாவை நான் தப்பு செய்தேன் தெரியாமல் செய்துவிட்டேன் என்று ஒத்துக் கொள் என்று கூறியதும் கண்ணம்மா வீரமாக வீட்டை விட்டு வெளியே கிளம்பி விட்டார். இன்றைய புரொமோவில் கண்ணம்மா மீண்டும் பாரதியின் வீட்டிற்கு ஒரு பெட்டியோடு வந்திருக்கிறார். பாரதியிடம் அவருடைய பொருள்கள் ஒப்படைத்துவிட்டு இதில் உங்களுடைய பொருள்கள் எல்லாம் இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

கண்ணம்மாவின் மீண்டும் சபதம்

கண்ணம்மாவின் மீண்டும் சபதம்

பொருள்களை எல்லாம் மீண்டும் கொண்டுவந்து கொடுத்ததை பார்த்த சௌந்தர்யா, அப்போ எல்லாத்தையும் முடித்து விடலாம் என்று நினைக்கிறாயா?? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு நான் எந்த தப்பும் செய்யவில்லை, என் குழந்தையின் அப்பா யார் என்பதை நான் அனைவருக்கும் நிரூபிப்பேன் என்று கண்ணம்மா மீண்டும் சபதம் போட்டிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் தொடங்கி விட்டார்களா?? சபதத்தை இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று கலாய்த்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+