மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர்கள்..அப்போ இன்று பஞ்சாயத்து இருக்கு
சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேஷன் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் இன்று உள்ளே வந்துள்ளனர்.
மீண்டும் தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்கள் வந்ததும் ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிகிறார்கள்.

அப்போ பஞ்சாயத்து இருக்குமா? ?
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நேரத்தில் தற்போது இந்த சீசனில் எலிமினேஷன் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இது ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுப்பதாக இருந்து வருகிறது. கடைசி வாரமாக இருக்கும் இந்த வாரத்தில் பைனலில் இருக்கும் 5 போட்டியாளர்கள மட்டுமே இந்த வீட்டிற்குள் இருந்த நிலையில், எலிமினேஷன் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக மீண்டும் உள்ளே வந்துள்ளதால், இன்று எப்படியும் பஞ்சாயத்து இருக்குமா?? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பாவனிக்கு பறக்கும் அட்வைஸ்
பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களில் எலிமினேஷன் ஆகி வெளியே சென்றவர்கள் மீண்டும் கடைசி வாரத்தில் வருவது வழக்கமாக நடப்பதுதான். தற்போது அது இன்று தொடங்கி இருக்கிறது. இன்று முதல்முறையாக இரண்டு போட்டியாளர்கள் வந்திருக்கின்றனர். அதுவும் சுருதி மற்றும் நாடியா சங் . இவர்கள் இருவரின் வருகையால் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூடுகிறதோ இல்லையோ பாவனிக்கு அட்வைஸ் நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் கமல் முன்னிலையில் பாவனியிடம் பேசிய சுருதி அட்வைஸ் மழையை பொழிந்தார் . ரசிகர்களின் மனதில் இருப்பதை அப்படியே கூறிவிட்டார் என்று பலர் கூறிவந்தனர்.

நெட்டிசன்களின் கலாய்ப்பு
தாமரை இந்த வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் சுருதி இந்த வீட்டிற்குள் வந்ததும் ஒரு சில நெட்டிசன்கள் தாமரை வெளியே சென்றால் தான் நான் உள்ளே வருவேன் என்று சுருதி சபதம் போட்டு இருந்தாரா??என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நாடியா வெளியேறி இருந்ததால் தற்போது இவர் மீண்டும் வீட்டிற்குள் வந்து இருப்பதால் தன்னுடைய திறமையை வெளி காட்டுவாரா??என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
Recommended Video

நிரூப் மீது பாயும் வெறுப்பு
பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது சுருதி நிரூப்பிடம் வரவர ஹீரோவா மாறிட்ட போல என்று கேட்டிருக்கிறார். இதை பார்த்ததும் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் ரசிகர்கள், அது எப்படி... அழகா இருக்கிற பசங்கள மட்டும் பொண்ணுங்களுக்கு பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம். ரொம்ப பிடிக்கிறது...கேட்டா க்ரஷ் என்று சொல்லுவாங்க ...என்று பீல் பண்ணி வருகின்றனர். சுருதி பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போதே பாவனியை கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை வெளிக்காட்டி இருந்தார். இன்று இவர்கள் இருவரும் என்ன பேசுவார்கள் என்று பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications