கிண்ணம் பிரச்சனையை கின்னஸில் கொண்டு வந்துவிட்டார்... பிரியங்காவின் முகத்தில் சாயத்தை வீசிய ராஜு
சென்னை: பிரியங்காவின் மீதுள்ள கோபத்தை முகத்துக்கு நேராக பேசி ராஜூ செய்த செயல் வைரலாக பரவி வருகிறது.
எப்பவோ நடந்த பிரச்சனைகளை இப்போது டாஸ்க்கில் சொல்லி காண்பித்து விளையாடும் விளையாட்டுகளை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பனங்கிழங்கின் பயன்கள் என்னென்ன?.. கவிதை வடிவில் அருமையாக விளக்கிய கவிப்பேரரசு வைரமுத்து.. செம ட்வீட்
ராஜுவின் இன்றைய டார்கெட் பிரியங்கா தானா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
ரசிகர்களின் கருத்து
நேற்றைய எபிசோடுகள் சண்டை சச்சரவோடு கொண்டு போய்க் கொண்டிருந்ததால் இன்று மீண்டும் குறைசொல்லும் டாஸ்க்கை கொண்டு வந்து விட்டதா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று பார்த்தால் சில நேரங்களில் கலவரத்தை ஏற்படுத்தி விடும் போல இருக்கிறது என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.
டாஸ்க்கில் ஏற்பட்ட பிரச்சனை
டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஜெயிப்பதற்காக போட்டியாளர்கள் கடும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது இதில் பிசிக்கல் டாஸ்க் வைத்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இங்கே பிசிக்கல் டாஸ்க் கலவரமாகி விடுமளவிற்கு நேற்றைய எபிசோடு அமைந்துவிட்டதால். இதுவே போதும் என்று ரசிகர்களின் மனதே பதறிப்போய் இருக்கிறதாம். விளையாட்டு என்றாலும் அதில் பல பிரச்சனைகளை கொண்டுவந்து போட்டியாளர்கள் ரசிகர்களை மிரட்டி விட்டார்கள்.
ராஜுவின் செயல்
இன்றைய எபிசோடுக்காண முதல் ப்ரமோவில் எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த நேரத்தில் இன்றும் அதே டிக்கெட் ஜெயிப்பதற்கான டாஸ்க் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் பிரியங்கா மீது தனக்கு இருக்கும் கோபத்தை ராஜூ வெளிப்படையாக காட்டிவிட்டார். பிரியங்காவின் முகத்தில் தன்னுடைய பலூனை உடைத்து கலரை பூசிவிட்டார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஒரு சின்னக் கிண்ணம் பிரச்சனையை கின்னஸில் அளவில் கொண்டு சேர்க்கிற மாதிரி பிரியங்கா பண்ணி விட்டார். அதனால் இப்படி செய்கிறேன் என்று அவர் விளக்கமும் கொடுத்து இருக்கிறார்.
Recommended Video
அடுத்த பிரச்சனையா
ராஜு செய்த செயலையே அவருக்கு அடுத்ததாக வந்த சஞ்சீவ் செய்ததால் பிரியங்கா காண்டில் இருக்கிறார். நன்றாக விளையாடும் திறமை உள்ளவர்களை எல்லாம் தகுதி இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டு யார் ஜெயிக்க வைப்பதற்காக இந்த மாதிரி அனைவரும் செய்கிறார்கள் என்று பலர் குழப்பத்தோடு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய பிரச்சனையின் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை அதற்குள் அடுத்த பிரச்சினையை தொடங்கி விட்டார்களா? ?என்றும் பலர் கலாய்த்து வருகிறார்கள்.