பிக் பாஸ் தமிழ் 5:போட்டிபோடும் ஆரி- பாலாஜி கருத்துக்கள்..ட்ரெண்டிங்கில் முதலிடம் இவருக்கா
சென்னை: டுவிட்டரில் விஜய்-அஜித் ரசிகர்கள் ரேஞ்சுக்கு ஆரி- பாலாஜி முருகதாஸ் ரசிகர்கள் மிகப்பெரிய கருத்து மோதல்களை நடத்தி வருகின்றனர். பிக் பாஸ் சீசன்4ன் போது வீட்டிற்குள்ளேயே கீரியும் பாம்பும் ஆக இருந்த ஆரியும்- பாலாஜியும் இன்னும் அந்த வேகம் குறையாமல் தான் இருக்கிறார்கள் போல..!!!
டுவிட்டரில் ஆரி புள்ளி வைத்து ஆரம்பித்து வைத்ததற்கு.. பாலாஜி எதிர் புள்ளி வைக்க.. இருவர் ரசிகர்களும் அதை மிகப்பெரிய கோலம் ஆக மாற்றி ட்விட்டரில் மாறி..மாறி.. பொங்கல் வைத்து விட்டனர்.
எந்தவொரு நபரையும்.. வேக்சின் போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
எதிர் எதிர் துருவங்கள்
பிக்பாஸ் சீசன் 4ல் ஆரம்பத்திலிருந்தே ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருந்த ஆரிக்கு நல்ல டப் கொடுத்து வந்தவர் பாலாஜி முருகதாஸ். ஆரி ரசிகர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் அளவிற்கு சில வாரங்கள் ஆரியை விட கூடுதல் ஓட்டு வித்தியாசங்களை பெற்று மிரட்டி வந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்ட இருவரும் இடையே வார்த்தை போர் நடைபெறாத நாட்கள் குறைவு தான். அந்த அளவிற்கு ஒன்றுக்கொன்று சளைத்தவர் இல்லை என்பதுபோல் செயல்பட்டனர். என்னதான் ஆரிக்கு டப்பு கொடுத்து வந்தாலும் ஆசியுடன் கம்பேர் செய்து பார்க்கும் பொழுது.. பிறரையும், பிறர் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் விஷயத்திலும் பாலா கொஞ்சம் வீக்காக தான் இருந்தார்.
இருவரின் செயல்பாடுகள்
ஒருவழியாக டைட்டில் வின் பண்ணிய ஆரி தன்னுடன் இருந்த சக போட்டியாளர்களுடன பெரிய அளவில் எந்தத் தொடர்பும் வைத்ததுபோல் வெளியில் தெரியவில்லை.ஆனால் பாலாஜி முருகதாஸ் தன்னுடன் இருந்த போட்டியாளர்களில் பெண் போட்டியாளர்களுடன் மட்டுமே இன்றளவும் நட்பில் இருந்து கொண்டு பல வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
டுவிட்டரில் சூடான ட்விட்
பிக் பாஸ் சீசன் 5 இறுதிப்போட்டி நிகழ்ச்சிக்கு தன்னை எதிர்பார்த்து இருக்க வேண்டாம் தனக்கு அழைப்பு இல்லை என்று ஆரி ட்விட் செய்திருந்தார்.அதுவரை இறுதிப் போட்டி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத பாலாஜி முருகதாஸ்,.. 'கூட்டம் சேர்ந்தால் கொரோனா பாதிக்கும்.. என்பதால் பெரிய அளவிற்கு யாரையும் அழைக்கவில்லை' என்று ஆரியின் ட்விட்டிற்கு எதிர்கருத்து கூறுவதாக நினைத்துக் கொண்டு,தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டுள்ளார். இதைப் பார்த்த பாலாஜி ரசிகர்கள் 'பாலா கரெக்டா சொல்லி இருப்பதாகவும், சிலர்... பிறரை குறை சொல்லியே வளர நினைப்பதாகவும்..'கூறி ஆரியை வம்பிழுக்க ஆரி ரசிகர்களும் பதிலுக்கு கடந்த சீசனின் வின்னரை கூப்பிடுவது வழக்கம் தான், ரன்னரை எதற்காக கூப்பிட வேண்டும் என்று மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video
ரசிகர்களின் கருத்து போர்
சென்ற முறை இறுதிப் போட்டியின் போது முகின்னை கூப்பிடவில்லை என்றால் கொரோனா நடைமுறை அமலில் இருந்ததால் பார்வையாளர்களே அந்த நேரத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்த முறை பார்வையாளர்கள் இருக்கிறார்கள், சிவகார்த்திகேயன் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் வருகிறார்கள், ஆரி ஒருவர் வருவதில் தான் கொரோனா வந்துவிட போகிறதா..!?என்று நியாயமான கேள்வியை ஆரி ரசிகர்கள் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மற்றவரை குறை சொல்கிறார் என்ற ஒற்றை கருத்தை மட்டும் பிடித்துக் கொண்டு கத்தி நீட்டி வருகின்றனர் பாலாஜி ரசிகர்கள்.