பிக்பாஸ் அல்டிமேட்: விடாமுயற்சி தான் முக்கியம், நான் விடமாட்டேன்.. அனிதாவை வாயடைக்க வைத்த வனிதா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா பேசியதை கேட்டு சக போட்டியாளர்களும் வாயடைத்து போய் இருக்கின்றனர்.
தன்னோடு போட்டிபோடும் அனைத்து போட்டியாளர்களுக்கும் தனியாளாக வனிதா கெத்து காட்டியிருக்கிறார்.

மீண்டும் வனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்த வரிசையில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரையும் ஆட்டம் காண வைத்த ஒரு போட்டியாளரான வனிதா இதில் அறிமுகமாகியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் வியப்பையும் எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது.

சக போட்டியாளர்களின் குற்றச்சாட்டு
வனிதா அறிமுகமாக போகிறார் என்று சொன்னதுமே அவருடைய ரசிகர்கள் அப்போ இந்த நிகழ்ச்சி களைகட்ட தொடங்கிவிடும், சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறிவந்தனர். வந்த முதல் நாளே தன்னுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை இவர் நிறைவேற்றி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் இதுவரைக்கும் நான்காவது முறையாக அடியெடுத்து வைத்திருப்பதால் தான் தான் வீட்டின் உரிமையாளர் என்பது போல நடந்து வருகிறார் என்பது அனைவருடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

ஆரம்பமே இப்படியா
பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் நாளிலே இந்த வார எலிமினேஷனுக்கானா நாமினேஷன் எடுக்கப்பட்டது. இதில் அதிகமான ஓட்டுகளை பெற்று முதலிடத்தில் வனிதா தான் இருந்து வருகிறார். ஆரம்பமே இவருக்கு எதிராக இருக்கும் நிலையில் இவர் இந்த வீட்டிற்குள் தன்னுடைய ஆட்டத்தை எந்த சூழ்நிலையிலும் குறைக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறாரோ?? என்று பலரும் கூறி வருகிறார்கள் இன்றைய எபிசோடில் இவருக்கு காபி பொடி கொடுக்கவில்லை என்று பிரச்சனைகளை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

தொடங்கிய வாக்குவாதங்கள்
வனிதா தனக்கு காபி கொடுக்கவில்லை என்பதால் டீ தூளை ஒளித்து வைத்துவிட்டார். இது போட்டியாளர்களுக்கு தெரியாத நிலையில் இவரிடம் காப்பி பொடி பிக்பாஸ் தரவில்லை என்று இவர் பேசிக் கொண்டிருக்கும் போது ,அனிதா பிக்பாஸ் தருவதை மட்டும் தான் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அனிதாவுக்கு ஜாடையாக இவர் காரசாரமாக பேச்சை தொடங்கியிருக்கிறார். ஒவ்வொரு சீசனிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒரு சிலர் எங்கள் சீசனில் இது தரவில்லை எங்கள் சீசனில் அது தரவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது நான் விடாமுயற்சியோடு போராடிக்கொண்டு எப்படியும் வாங்கி விடுவேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விடாமுயற்சி முக்கியம் என்று காபி பொடிக்காக காலை வேளையில் கலவரத்தை தொடங்கியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications