அண்ணாச்சிக்கு வாய்ப்பு கொடுத்த கமல்...ஆரவாரத்தில் ரசிகர்கள்
சென்னை: இமான் அண்ணாச்சி தான் நினைத்தது மாதிரி கடைசிவரைக்கும் வீட்டிற்குள் இல்லாவிட்டாலும் கமல், அவருக்கு ஆறுதலான விஷயத்தை கூறியுள்ளார்.
இமான் அண்ணாச்சியின் ரசிகர்களுக்கு கமலின் செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
விரைவில் வெள்ளித்திரையில் கமலுடன் இணைவார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

போட்டிகள் அதிகரித்து உள்ளது
பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டாலே வாழ்க்கையில் பெரிய மாற்றம் நடந்துவிடும் என்று பல போட்டியாளர்கள் போட்டிபோட்டு தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொடங்கிவிட்டனர். முதல் சீசன் முதல் கடந்த நான்கு சீசன்கள் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலர் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது இமான் அண்ணாச்சிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்ணாச்சிக்கு தைரியம் தான்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒருசில போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று தலைதெறிக்க ஓடி விடுவதும் உண்டு. காரணம் இதில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் நல்ல பெயரில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களின் பெயரும் மரியாதையும் தலைகீழாக குறைந்து விடுகிறது. இதனால் தாங்கள் இருப்பதை இழந்து விடவேண்டாம் என்று இருந்து வருகின்றனர். ஆனால் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தற்போது உச்சத்தில் இருக்கும் இமான் அண்ணாச்சி தைரியமாக இந்த சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

அண்ணாச்சியின் நம்பிக்கை
ஆரம்பத்தில் நகைச்சுவையாக இவர் பேசும் வார்த்தைகளும், செயல்களும் பலருக்கும் பிடித்து இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல ஒரு சில இடங்களில் இவர் செய்யும் செயல்கள் ஆணாதிக்கத்தில் இருப்பதாகவும், பெண்களை மட்டம் தட்டுகிறார் என்று பல நேரங்களில் இவர் மீது குற்றச்சாட்டுகள் குவிந்து வந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நான் எப்படியும் 106 நாட்கள் இருப்பேன் என்று நம்பிக்கையாக கூறிக் கொண்டிருந்த இவர் தற்போது 70 நாட்களை தாண்டிய நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ஆனால் இவருடைய வெளியேற்றம் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. நாங்கள் கஷ்டப்பட்டு ஓட்டு போட்டாலும் பிக்பாஸ்க்கு பிடித்த நபர்களை செவ் செய்துவிட்டு அண்ணாச்சியை தூக்கி விட்டனர் என்று ரசிகர்கள்
கோபத்தில் இருந்து வருகின்றனர்.

மகிழ்ச்சியான செய்திதான்
அண்ணாச்சியின் வெளியேற்றத்தால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கும், அண்ணாச்சிக்கும், அண்ணாச்சி வெளியேறும்போது கமல் கூறிய ஆறுதலான வார்த்தை மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தன்னுடைய திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று கமல் கூறியிருக்கிறார். இதுவே தனக்கு கிடைத்த பெரிய கிப்ட் தான் என்று அண்ணாச்சி மகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். இதை பார்க்கும்போது எப்படியும் வெள்ளித்திரையில் இனி அண்ணாச்சிக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications