Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாம் சொல்லி தானே கல்யாணம் பண்ணுனேன்.. கோபத்தில் மகாலட்சுமி.. இவ்வளவு நாளுக்குள் இப்படியா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் தான் திருமணம் முடிந்த சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தன்னுடைய கணவரோடு ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோ பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமணத்திற்கு முன்பு இதை செய்யக்கூடாது என்று சொன்னதை ரவீந்தர் செய்து வருவதால் கடும் கோபத்தில் மகாலட்சுமி இருக்கிறாராம்.

திருமணத்திற்கு முன்பு எல்லாத்துக்கும் ஓகே என்று சொன்ன ரவீந்தர் இப்படி நடந்து கொள்ளலாமா என்ன ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

மகாலட்சுமியின் திடீர் திருமணம்

மகாலட்சுமியின் திடீர் திருமணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வாசுகி கேரக்டரில் நடித்து வரும் மகாலட்சுமி பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அவர் தற்போது திடீரென்று இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே அவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது திருமணம் பலரையும் வியப்புக்குள் ஆழ்த்தி இருந்தது.

பொருத்தம் இல்லாத திருமணம்

பொருத்தம் இல்லாத திருமணம்

காரணம் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்திருந்தது தான். 90ஸ் கிட்ஸ்களில் பேவரைட் தொகுப்பாளராக இருந்த மகாலட்சுமி இவருக்கு கொஞ்சம் கூட அழகில் பொருத்தம் இல்லாத ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் தங்களுடைய கவலைகளை கமாண்டுகளில் கொட்டி வந்தனர்.

கண்டிஷன் மறந்து போச்சாம்

கண்டிஷன் மறந்து போச்சாம்

மகாலட்சுமி திருமணத்திற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்வது எனக்கு எந்த தொந்தரவு தரும் விதத்தில் இருக்க கூடாது. பிக் பாஸ் நிகழ்ச்சி ரிவ்யூ கொடுக்கிறேன் என்கிற பெயரில் மணி கணக்கில் வீடியோ முன்பு இருக்கக் கூடாது என்று பிக் பாஸ் குறித்து பல கண்டிஷன் மகாலட்சுமி கூறியிருந்தாராம். ஆனால் அதற்கு எல்லாம் சரி என்று கூறிய ரவீந்தர் தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கியதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்வதற்கு தொடங்கி இருக்கிறார். இதனால்தான் மகாலட்சுமிக்கு ரவீந்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறதாம்.

என்ன சத்தம் அங்கே

என்ன சத்தம் அங்கே

ரவீந்தர் தனியார் சேனலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார். அதற்காக அவர் அறிமுகம் செய்வதற்காக சத்தமாக பேசியபோது, கடுப்பான மகாலட்சுமி என்ன சொன்னேன்? நான் இப்படி செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கேன் அல்லவா? என்று மிரட்டுகிறார். உடனே வாயில் கையை வைத்து அடக்கி வாசித்தபடியே ரவீந்தர் பேசி இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். என்னதான் ஊருக்கு உபதேசமும் அடுத்தவர்களை வக்கனையை கலாய்த்து வந்தாலும் வீட்டிற்குள் இருப்பவர்களிடம் அடங்கி தான் போக வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோவை தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இவர்கள் இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+