பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அதிரடியை கிளப்ப போகும் புது என்ட்ரி யார் தெரியுமா??
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் லேட்டஸ்ட் ப்ரமோ ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய நபர் இந்த சீரியலில் அறிமுகமாக போகிறார் என்று பலருக்கும் தெரிந்தாலும், யார் அவர் என்று அனைவரும் கேட்டு வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த மீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் முதன்மையானதாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குடும்ப கதையை மையமாகக் கொண்டது. அண்ணன் தம்பிகளின் அன்பு பாசத்தை இந்த சீரியல் விளக்கிக் கொண்டிருந்தாலும், இதில் நடக்கும் சண்டை சச்சரவுகளும் சுவாரசியமாக தான் இருந்து வருகிறது. இதில் பலருக்கும் பேவரைட் கேரக்டராக இருக்கும் மீனா அடிக்கடி செய்யும் செயல்களும், செல்ல கோபமும், பிடிவாதங்களும் தான் இந்த சீரியலின் சுவாரஸ்யத்துக்கு மேலும் மெருகூட்டி வருகிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

திடீரென மாறிய கதைக்களம்
இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு திடீர் மரண செய்தியை வைத்து அழுகாச்சி சீன்களை கொண்டுவந்து பலரையும் பீல் பண்ண வைத்துவிட்டனர். கண்ணன் ஐஸ்வர்யாவின் திடீர் திருமணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், இந்த நேரத்தில் அடுத்த ஒரு மரணத்தை வைத்து சீரியலை ஒரு சில வாரங்களுக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டனர். அதற்கு பிறகு சுவாரசியமாக எதுவும் இல்லையே என்று பலர் கேட்டுக்கொண்டிருந்தது சீரியல் டீமுக்கு தெரிந்து விட்டது போல.

அடுத்த திருப்பம்
தற்போது சீரியலில் கண்ணனை குடும்பத்தில் சேர்த்து இருந்தாலும் கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு உறவினர்கள் யாரும் மரியாதை கொடுக்காத நிலையில் தான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கயல் பாப்பாவின் காதுகுத்து விழா சிறப்பாக நடத்த வேண்டும் என்று மீனாவின் தந்தை ஆசைப்பட்டு உள்ளார். அவரது ஆசைக்கு குடும்பமும் சம்மதித்து விழாவை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத பல நிகழ்வுகள் அதில் நடந்து வருகிறது.

தொடங்கியது தாய்மாமன் பிரச்சனை
மீனாவின் குழந்தை கயல் பாப்பாவிற்கு தாய்மாமன் முறை செய்வதற்காக தனத்தின் அண்ணன் செலவுகளை செய்து வந்திருப்பதை பார்த்ததும் மீனாவின் தந்தை நீ எதற்கு இதெல்லாம் செய்கிறாய் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு தனத்தின் அண்ணன் கயலும் என்னுடைய மருமகள் தான் என்று கூறியிருக்கிறார். அடுத்த நொடியே மீனாவின் அம்மா சடங்கு செய்வதற்காகவே மீனாவின் அப்பாவின் அண்ணன் மகன் வந்துள்ளான் என்று கூறியிருக்கின்றனர். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வெடி வெடித்து அலப்பறை செய்து கொண்டு ஒரு கூட்டம் வருகிறது. அதை வரவேற்க குடும்பமே சென்றிருக்கிறது. அப்போது புதுமுகம் இந்த சீரியலில் ஒருவர் அறிமுகமாகிறார்.

புதிய அறிமுகம்
சீரியலில் அறிமுகமாகும் நபரின் முகத்தை சரியாக காட்டாததால் ரசிகர்கள் யார் அவர் என்று ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோ ஒன்றை மீனாவாக நடிக்கும் ஹேமா வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்ததும் ரசிகர்கள் இவர்தானா அவர் என்று கேட்டு வருகின்றனர். அவரைப் பற்றியும் அதிகமாக விசாரித்து வருகின்றனர்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க












Click it and Unblock the Notifications