Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியன் வீட்டில் நடந்த சம்பவம்! பயத்தில் கதறிய கோமதி, அழுத கதிர்.. ராஜி சொன்ன விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 10-ம் தேதிக்கான எபிசோடில், மயில் குடும்பத்தினர் கொடுத்த புகார் காரணமாக, ஜெயிலில் இருந்த விஷயங்களை நினைத்து பார்த்த மொத்த குடும்பமும் சோகத்தில் இருக்கின்றனர். அப்போது அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக பாண்டியன் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் செந்தில் மீனாவிடம் நீதான் மயில் குடும்பத்திடம் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க சொன்னியா? எல்லாரையும் தூக்கி உள்ள வச்சா நாம மீண்டும் அந்த குடும்பத்தோட சேர்ந்து வாழலாம்னு எதுவும் பிளான் போட்டியா என்று கேட்க அதற்கு மீனா கோபமாக திட்டுகிறார்.

Pandian Stores serial vijay tv

அதை தொடர்ந்து இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கதிர் ரூமுக்குள் வர, அங்கு ராஜி சோகமாக இருக்கிறார். அப்போது ராஜியிடம் கதிர் மன்னிப்பு கேட்க, அதற்கு கதிர் நீ போலீஸ் ஆகி கெத்தா ஸ்டேஷனுக்கு போகணும் என்று நினைத்தேன். ஆனால் இப்போ குற்றவாளி மாதிரி கூட்டிட்டு போய்ட்டாங்க... நீ என்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா உனக்கு இப்படி நடந்திருக்காதே என்று கவலைப்படுகிறார்.

அதற்கு ராஜி உன்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா எனக்கு இதைவிட பெரிய பிரச்சனை எல்லாம் வந்து இருக்கும் என்று சொல்கிறார். பிறகு கதிரிடம் பேசும்போது நான் ஸ்டேஷனுக்கு வந்தது கூட பரவாயில்லை ஆனால் அரசியும், அத்தையும் வந்ததுதான் கவலையா இருக்கு என்று சொல்கிறார். அதற்கு கதிர் ஆமா என்னுடைய அம்மா பாவம்.

அவங்க யாரும் இல்லாமல் தனியா இருக்கும்போது உடம்பு சரியில்லாமல் போய் மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க, அவங்களுக்கு ஏதாவது ஆகி இருந்துச்சுன்னா.. என்று வருத்தப்படுகிறார். பிறகு அழுது கொண்டிருக்கும் கதிருக்கு ராஜி ஆறுதல் சொல்கிறார். மறுபக்கத்தில் சரவணன் தூங்கி கொண்டு இருக்கும் போது, இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் எல்லாம் கனவில் வருகிறது.

எல்லோரும் ஜெயிலில் கஷ்டப்பட்டதை நினைத்து பார்த்து தூக்கத்திலேயே கத்தி விடுகிறார். அப்போது பக்கத்தில் இருந்த பழனி என்ன ஆச்சு என்று கேட்டு, அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொண்டு வர செல்கிறார். அதற்கு சரவணன் வேண்டாம் மாமா நீ என் பக்கத்திலேயே இரு என்று குழந்தை போல சொல்ல, பழனியும் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் சரவணன் போலவே கோமதியும் தூக்கத்திலேயே இரண்டு நாட்கள் ஆக அவர்கள் பட்ட மனவேதனை, தூக்கத்தில் கூட அவர்களை சித்திரவதை செய்கிறது. கோமதி தூக்கத்தில் உளறுவதை பார்த்து அரசி என்னாச்சு அப்பா என்று கேட்க பாண்டியன் ஒன்னும் இல்லை நீ தூங்குமா என்று சொல்கிறார்.

பிறகு அடுத்த நாள் காலையில் எல்லோரும் தூங்கி முழிப்பதற்கு முன்பு பாண்டியன் எழுந்து எல்லோருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறார். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது சரவணன் இன்னைக்கு கடைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாண்டியன் மட்டும் கடைக்கு போகிறார். அப்போது வாசலில் முத்து வேலை பார்க்க இருவரும்
லேசாக சிரித்துக் கொள்கின்றனர்.

அந்த நேரத்தில் பழனி வீட்டிற்குள் இருந்து வருவதை பார்த்த கோமதி, நீ இரவு முழுக்க இங்கே தான் இருந்திராத என்று கேட்க, அதற்கு பழனி ஆமா, சரவணனை விட்டுட்டு போறதுக்கு மனசு இல்ல அதான் இங்கேயே இருந்துட்டேன் என்று சொல்ல, எனக்கு ஒரு பிரச்சனை என்றதும் எல்லோரும் வந்துட்டீங்க என்று கோமதி அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+