மீண்டும் சந்தித்துக்கொண்ட பிரியங்கா அணி..இப்ப ரொம்ப மாறிட்டாங்க போல
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததும் முதல்முறையாக பிரியங்காவின் அன்பு நண்பர்களின் மீட்டிங் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
என்னதான் அடித்துக் கொண்டாலும் தற்போது பிரியங்கா, நிரூப், ஐக்கி மூவரும் செய்த செயல் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வித்யாசமான ஐந்தாவது சீசன்
பிக் பாஸ் ஐந்தாவது சீசன் இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன் களை போன்று இல்லாமல் விறுவிறுப்பாகவும் பல நேரங்களில் கலகலப்பாக இருந்தது. இதற்கு முந்தைய சீசன்களில் அதிகமாக சண்டை சச்சரவுகள் தான் இருந்துகொண்டிருக்கும், ஆனால் இந்த சீசன் அதற்கு மாற்றமாக சண்டை போடும்போது போட்டுக் கொண்டாலும் அடுத்த நிமிடமே கட்டிப்பிடி வைத்தியத்தை செய்து கொண்டு அனைவரும் சகஜமாகி விடுகின்றனர். இது இயல்பான கேரக்டரா?? அல்லது நடிப்பா?? என்று புரிந்து கொள்ள முடியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.

லைவில் வரும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்தாலும் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த விட்டதே என்று ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வருகின்றனர். தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அடிமைகளாக மாறிவிட்டனர். அதனால் இந்த நிகழ்ச்சி கலந்துகொண்ட போட்டியாளர்களை பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர். அவர்களிடம் சமூக வலைத்தளத்தில் போட்டியாளர்கள் பலர் ரசிகர்களிடம் லைவில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ஐக்கி பெர்ரி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்துள்ளார். இவர் கையில் போன் இல்லாமல் இருந்து கொள்ளவே முடியாது எனும் நிலையில் தான் இருந்து வந்தாராம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அங்கே எப்படித்தான் போன் யூஸ் பண்ணாமல் இருந்தார் என தெரியவில்லை என்று ரசிகர்களும் அவரேவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அடிக்கடி லைவில் ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல டான்ஸ் வீடியோக்களையும், போட்டோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

மாறிவிட்டார்களா
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் போட்டியாளர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து சந்தித்துள்ளனர். அதில் நிரூப், பிரியங்கா மற்றும் ஐக்கி ஆகிய மூவரும் சந்தித்துக்கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் தற்போது ஐக்கி பெர்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் நிரூப் இடம் ஐக்கி பேசுவது பிரியங்காவிற்கு பிடிக்கவில்லை என்று நேரடியாகவே கூறியிருக்கிறார். ஆனால் தற்போது வெளியே வந்த பிறகு இவர்கள் மூவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி தங்கள் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். வழக்கம்போல கலாய்த்து வருகிறார்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications