எல்லாத்தையும் சகிக்க முடியாது...தாமரையை லெப்ட் ரைட் வாங்கிய ராஜு
சென்னை: தாமரைக்கு அட்வைஸ் வழங்கிய ராஜூவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்
தங்கள் மனதில் இருப்பதை அப்படியே சொல்லி விட்டார் என்று பலர் கூறினாலும், வேற லெவல் தலைவா என்று ஆர்ப்பரித்து வருகின்றனர்.
அறிவுரை எல்லாம் நமக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி என்று பக்குவமாக இவர் சொல்லிய விதம் பலரையும் கவர்ந்திருக்கிறது.

எரிச்சல் அடையும் ரசிகர்கள்
இந்த வாரம் முதல் நாளில் இருந்தே தாமரைச் செல்வியின் ஆக்ரோஷம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இவர் மீது தப்பு இருக்கிறதா??..இல்லையா??என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தாலும் இவர் செய்யும் செயல்கள் எரிச்சலூட்டுகிறது என்று இவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆரம்பத்தில் இவர் வெகுளியாக இருக்கிறார் என்று கூறி இவருக்கு சப்போர்ட் கொடுத்து ரசிகர்களை தற்போது இவருக்கு எதிராக கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து
பாவனி, சுருதியிடம் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சிலர் முதலில் இவரை திட்டி தீர்த்து கொண்டிருந்தனர். பின்பு எபிசோடு பார்த்த பிறகு இவர் மீது தப்பு இல்லை என்பதை புரிந்து கொண்டாலும் இவர் அந்த விஷயத்தை இன்னும் மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு முறையும் குத்திக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ப்ரமோவில் மிரட்டுகிறார்
நேற்றைய எபிசோட்டில் தாமரைச்செல்வி உடை உடுத்தும் முறையைப் பற்றி சுருதியை குறை கூறி இருக்கிறார். அதை கேட்டதும் அவருக்கு ஆதரவாக சிபி குரல் கொடுத்ததற்கு, ஒருபக்கம் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும், இன்னொரு பக்கம் இது தவறு என்றும் கூறிவருகின்றனர். இரண்டு மனநிலையில் ரசிகர்கள் இருக்கும்போது இன்றும் தாமரைச்செல்வி அதே வேலையை செய்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து தற்போது இந்த வாரம் முழுக்க இவருடைய பர்பாமன்ஸ் தான் ப்ரமோ வில் காட்டப்பட்டு வருகிறது.

ராஜுவின் அறிவுரை
ஒரு சில ரசிகர்கள் இவர் அடிக்கடி ப்ரமோவில் சண்டை போடும் காட்சிகளைப் பார்த்ததும் இவர் மீது எரிச்சல் அடைந்து வருகின்றனர். இதனை புரிந்து கொண்ட ராஜூ இவருக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். இப்படி சத்தமாக பேசிக்கிட்டு இருக்காதே...இது எப்பவும் பார்ப்பது நல்லா இருக்காது!!..நீ செய்தது சரியாக இருந்தாலும், பார்ப்பவர்களுக்கு அப்படி தோன்றாது, என்று இவருக்கு பக்குவமாக அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். இவர் அதற்கு எந்த ஒரு எக்ஸ்பிரஷனையும் காட்டாமல் இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள், இனியாவது இவர் திருந்தினால் சரி என்று கூறி வருகின்றனர். இடம், பொருள், ஏவல் என்று இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல இவர் நடந்து கொண்டால் நல்லது. இவர் சிறப்பாக இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications