For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீநிதி செய்யறது ரொம்ப தப்பு.. போனை பறித்த தாய்.. நட்சத்திரா விஷயத்தில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீநிதி செய்வது மிகவும் தவறு. நட்சத்திரா நல்ல பொண்ணு, அவர் பிரிந்து போனதை தாங்க முடியவில்லை என்பதால் மனபிரம்மையில் பேசியுள்ளதாக ஸ்ரீநிதி தாய் பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி அண்மைக்காலமாக எதையாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்கிறார். வலிமை படம் வந்த போது படம் வலிமையாகவே இல்லையே என கூறி ரசிகர்களிடம் கடுமையான சொற்களால் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

அண்மையில் நான் சிம்புவைதான் திருமணம் செய்து கொள்வேன் என அடம்பிடித்த ஸ்ரீநிதி, இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் நவம்பர் 18ஆம் தேதியிலிருந்து நான் மன உளைச்சலில் இருக்கிறேன். எனது நெருங்கிய தோழி நட்சத்திராவுக்கு அப்பா இல்லை.

வலிமையால் வம்பில் மாட்டிய ஸ்ரீநிதி.. பேசவே பயமாக இருக்கிறது. . கண்கலங்கி கதறும் நடிகை வலிமையால் வம்பில் மாட்டிய ஸ்ரீநிதி.. பேசவே பயமாக இருக்கிறது. . கண்கலங்கி கதறும் நடிகை

சின்னத்திரை

சின்னத்திரை

அம்மா மட்டும்தான். கஷ்டப்பட்டு சின்னத்திரைக்குள் வந்திருக்கிறாள். என் வீட்டில் இரண்டரை ஆண்டுகள் இருந்தாள். நான் அறிமுகப்படுத்திய ஒரு பையனை அவள் காதலித்தாள். நவம்பர் 18ஆம் தேதி நட்சத்திராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் எங்களுக்கு தெரியவே தெரியாது.

வார்த்தை

வார்த்தை

எங்களுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இதை தட்டி கேட்டதுக்கு நட்சத்திரா அம்மா என்னை அடிக்க வந்தார்கள். நட்சத்திராவுக்கு அநியாயம் நடக்குது, என்னால் காப்பாற்ற முடியலை. விஜே சித்ராவின் நிலை நட்சத்திராவுக்கு ஏற்படுமோ என்ற பயம் இருந்தது என இன்ஸ்டாவில் கூறியிருந்தார்.

ஸ்ரீநிதியின் தாய்

ஸ்ரீநிதியின் தாய்

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஸ்ரீநிதியின் தாய் இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஸ்ரீநிதி செய்யறது ரொம்ப தப்பு. நட்சத்திரா விஷயத்தில் அவள் சொல்வது எல்லாமே சரிதான். ஆனால் தன்னுடனே இருந்த நட்சத்திராவின் பிரிவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இப்படி பேசியுள்ளார்.

 ஸ்ரீநிதி இன்ஸ்டா போஸ்ட்

ஸ்ரீநிதி இன்ஸ்டா போஸ்ட்

ஸ்ரீநிதியை நான் சரி செய்து விடுவேன். ரொம்ப கஷ்டப்பட்டு இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டை கண்டுபிடித்து அந்த வீடியோ டெலிட் செய்தேன். உண்மையை உலகிற்கு சொல்ல வேண்டும் என ஸ்ரீநிதி நினைக்கிறார். ஆனால் அது சாத்தியமே இல்லை. சிம்பு விவகாரம் குறித்து நான் எதையும் பேச விரும்பவில்லை. சிம்புவுக்கு நிறைய பேர் ரசிகைகளாக இருப்பதை போல் ஸ்ரீநிதியும் ரசிகைதான். நட்சத்திரா நல்ல பொண்ணு. அந்த பையனும் நல்ல பொண்ணு. ஸ்ரீதியால் நட்சத்திராவின் பிரிவை தாங்க முடியலை. ஸ்ரீநிதிக்கு நேரம் சரியில்லை. அதனால் நான் விட்டு பிடிக்க வேண்டும். அவருடைய போனை நான் பிடுங்கி வைத்துக் கொண்டேன் என்றார்.

English summary
Serial Actress Srinidhi mother says that Nakshathra is very good girl, her lover also very good. Srinidhi's doing are wrong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X