சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்கும் சீதா! முத்து எடுத்த முடிவு! மீனாவுக்கு இது தேவையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா கிரிஷை எதற்காக தத்து எடுக்க வேண்டாம் என்று சொல்கிறார் என்பது பற்றி முத்துவுக்கு சந்தேகம் இருக்கிறது. அது பற்றி சீதாவிடம் சொல்கிறார். இதனால் சீதா மீனாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்ததா? இல்லையா? என்பது பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி வரைந்து கொடுத்த படத்தை கிரிஷ் நான் தான் வரைந்தேன் என்று மனோஜிடம் காட்ட, அதை பார்த்து மனோஜ் சந்தோஷப்படுகிறார். பிறகு எல்லோரிடமும் அதை காட்ட சொல்கிறார். எல்லோரும் நல்லாயிருக்கு என்று பாராட்டுகின்றனர். அப்போது மனோஜ் பாட்டியிடம் காட்டு என்று சொன்னது விஜயா என்னை பாட்டி என்று சொல்லக்கூடாது என்று சொல்லி இருக்கேன் இல்ல என்று சொல்லி அந்த ட்ராயிங் பேப்பரை கிழித்து விடுகிறார்.

விஜயா எப்படி செய்ததும் ரோகினி வருத்தப்படுகிறார். மொத்த குடும்பமும்
விஜயாவை சரமாரியாக திட்டுகின்றனர். அண்ணாமலை கிரிஷ்க்கு ஆறுதல் சொல்கிறார். அப்போது மனோஜ் ஏம்மா என் முகத்தை கிழிச்ச என்று சோகமாக கேட்கிறார். அதற்கு விஜயா இந்த பையனோட பாட்டி நல்ல தெளிவா பிளான் பண்ணி இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க. இனிமே வந்து இவனை கூப்பிடவே வர மாட்டாங்க என்று வழக்கம்போல திட்டிக் கொண்டிருக்கின்றார்.
இதனால் ரோகிணி தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்லி கிரிஷ் பற்றி விசாரிக்க சொல்றார். ரோகிணியின் அம்மாவும் மீனாவுக்கு போன் செய்து கிரிஷ் பற்றி விசாரிக்கிறார். பிறகு நான் சீக்கிரமாக வந்து கிரிஷை கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறார். இதனால் விஜயாவுக்கு அவமானமாக போகிறது. எப்படிடா இந்த குட்டிச்சாத்தானை வீட்டை விட்டு வெளியேற்ற என்று மனதிற்குள்ளே பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் ரோகிணி தன்னுடைய தோழிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிரிஷ் விஷயத்தில் வேற ஏதாவது பிளான் பண்ண வேண்டும் என்று ரோகிணி சொல்ல, அதற்கு வித்யா நீ எந்த பிளானும் போட்டு தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக்காத முத்து மீனா செய்வதை செய்யட்டும் அதுதான் உனக்கு நல்லது என்று அட்வைஸ் சொல்கிறார்கள். ஆனால் ரோகிணி முத்து எதற்காக மீனா தத்தெடுக்க வேண்டாம் என்று சொன்னார் என உண்மைகளை தோண்ட ஆரம்பித்திருக்கிறான், இதனால் என்னுடைய அம்மாவிடம் சொல்லி கிரிஷை தத்தெடுக்க வேண்டாம் என்று சொல்லலாம் என பிளான் செய்கிறார்.
அடுத்ததாக முத்து சீதாவை பார்க்க ஹாஸ்பிடலில் வந்து காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அருண் தான் சீதாவை பைக்கில் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறார். அருண் முத்துவை பார்த்ததும் வழக்கம் போல இவன் எதுக்கு உன்னை பார்க்க வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கான் என்று சீண்டி பேசுகிறார் ஆனால் முத்து எதுவும் பேசாமல் நின்று கொண்டிருக்கிறார்.
பிறகு சீதா போய் முத்துவிடம் என்னவென்று விசாரிக்க, மீனா கிரிஷை தத்தெடுக்க வேண்டாம் என்று சொல்கிறாள், ஆனால் என்ன விஷயம் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் அவள் தான் இதுக்கு ஒத்துக்கிட்டா ஆனா இப்போ வேண்டாம்னு சொல்லுறா என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு சீதா இதை நீங்க அக்காவிடமே கேட்கலாமே மாமா என்று சொல்ல, அதற்கு உங்க அக்கா தான் உண்மையை என்கிட்ட சொல்லவே இல்ல, நான் கேட்டாலும் அதை மறைப்பதற்கு காரணம் தான் சொல்லுவா அதனால் தான் உன்கிட்ட பேச சொன்னேன் என்று சொன்னதும் சரி நான் விசாரிக்கிறேன் என்று சீதா சொல்கிறார்.
அதை எடுத்து சீதா மீனாவிடம் பேசுகிறார். அப்போது முத்துவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இதனால் கடுப்பான மீனா எந்த காரணமும் இல்லை அத்தைக்கு தெரிஞ்சா விட மாட்டாங்க, அந்த பையனை தத்தெடுத்து கஷ்டப்படுத்த முடியாது அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்று சமாளிக்கிறார். இதுதான் உண்மையான காரணமாக என்று மீண்டும் கேட்க ஆமாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார்.
மீனா சொன்னதை சீதா நம்ப மறுக்கிறார். இதுதான் காரணமாக இருந்தால் இதை மாமாவிடம் சொல்லி இருக்கலாம் ஆனா அக்கா ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறாள் என்று சீதா சத்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் சத்யா மற்றும் சீதா இருவரும் தான் ரோகிணி பற்றிய உண்மைகளை கண்டுபிடிப்பார்கள் என்று தெரிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications