சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 19 Episode) சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 19ஆம் தேதிக்கான எபிசோடில், முத்து மீனா வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. அதே நேரத்தில் மீனாவை அசிங்கப்படுத்திய விஜயாவிற்கு வக்கீல் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், ரோகிணியிடம் இருந்து டைவர்ஸ் கிடைக்காமல் மனோஜ் ஏற்கனவே டென்ஷனில் இருக்கிறார். அதே நேரத்தில் அவன் அம்மா விஜயா, "இவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி விடணும்" என்று வேற லெவலில் பிளான் போட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த இரண்டு பிரச்சனையும் போதாதென்று தினேஷ் மீண்டும் வந்து ரோகிணியை மிரட்ட ஆரம்பிக்கிறார். "பணம் குடுக்கலேன்னா உன் ரகசியங்களை எல்லாம் முத்துவிடம் சொல்லிடுவேன்" என்று கெஞ்சவைக்கும் அளவுக்கு பிரஷர் போட்டு விட்டு போகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடு (Siragadikka Aasai serial today episode) ஆரம்பத்தில், முத்து தன் கார் ஷெட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா அங்கே வருகிறார். அதே சமயம் ஒரு கார், ஒரு வேன் வந்து நின்றது. யார் என்று பார்த்தால், முந்தைய எபிசோடில் முத்து காப்பாற்றிய மனநலம் குன்றிய சிறுவனின் பெற்றோர்கள் தான். அவர்கள் முத்துவுக்கு நன்றி சொல்ல வருகிறார்கள்.
அதோடு நின்றுவிடாமல், "நீங்க எங்களுக்கு பெரிய உதவி பண்ணீங்க, அதனால நாங்க உங்களுக்கு ஒரு வேன் வாங்கி கொடுக்கறோம்" என்று சொல்லி அந்த வேனை கீயுடன் கையிலே கொடுத்து விடுகிறார்கள். "நாங்கள் அடிக்கடி டிரிப் போவோம், அந்த வேனை யூஸ் பண்ணிக்கலாம், உங்களுக்கும் வருமானம் வரும்" என்று சொன்னதும் முத்து செம குஷியாகி போகிறார்.
முத்து போட்ட அடி
இந்த சந்தோஷம் நடக்கிற நேரத்திலேயே தினேஷ் அங்கே வந்து நிற்கிறார். அவரைப் பார்த்ததுமே ஏற்கனவே காரில் ஒருமுறை வரும்போது ஒரு பெண்ணை மிரட்டியதால் முத்து அவரை அடித்து துரத்தியது ஞாபகம் வருகிறது. அப்போது "ஒரு உண்மை சொல்லணும்" என்று சொல்லி, ரோகிணியை பற்றிய விஷயங்களை முத்துவிடம் பேச ஆரம்பிக்கிறார். ஆனால் முத்துவுக்கு அந்த விஷயங்கள் எல்லாம் ஏற்கனவே தெரியும். தெரியாதது மாதிரி நடிக்கிறார். பிறகு "உனக்கு என்ன வேணும்?" என்று கேட்க, தினேஷ் நேராக "எனக்கு பணம் வேணும்" என்று சொல்கிறார்.
அதுக்கப்புறம் தான் முத்து ரியல் கேரக்டரை காட்டுகிறார். அவனை ஒரு ரூமுக்குள் அழைத்துச் சென்று செம அடிகொடுக்கிறார். அடிபட்டு முகம் வீங்கியபடி வெளியே வரும் தினேஷ், "இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்" என்று சொல்லி அங்கிருந்து ஓடிப்போய்விடுகிறார்.
விஜயாவின் திமிரு
மறுபுறம் விஜயா, மனோஜை கூட்டிக்கொண்டு வக்கீலை பார்க்க போகிறார். அங்கேயே முத்துவும் மீனாவும் வருகிறார்கள். மீனா வழக்கம்போல அன்பாக "எப்படி இருக்கீங்க அத்தை?" என்று கேட்க, விஜயா ஒரு வார்த்தை கூட பேசாமல் சைலண்டாக நின்று விடுகிறார். பிறகு வக்கீல் சொல்லியதற்குப் பிறகுதான் "நல்லா இருக்கேன்" என்று வாய் திறக்கிறார்.
பின்னர் மனோஜ்-ரோகிணி டைவர்ஸ் கேஸுக்கு கவுன்சிலிங் நடக்கப் போகிறது, அதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வக்கீல் மனோஜுக்கு விவரமாக சொல்லுகிறார்.
ஏமாறும் விஜயா
இதற்கிடையில் விஜயா ஒரு ஷாக்கிங் கேள்வி கேட்கிறார் - "டைவர்ஸ் ஆகும் முன்னாடியே அவனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணலாமா?" என்று. இதைக் கேட்ட வக்கீல் நேராக, "அப்படி செய்தீங்கனா நேரா ஜெயில் தான்" என்று கடுமையாக எச்சரிக்கிறார். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகி விடுகிறார்.
வக்கீல் கொடுத்த அதிர்ச்சி
அதற்குப் பிறகும் விடாமல், "அப்படின்னா நிச்சயதார்த்தமாவது செய்யலாமா?" என்று கேட்க, அதற்கும் வக்கீல் நோ சொல்லி, "இப்ப எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யக் கூடாது" என்று ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுக்கிறார். ஆனால் "பெண்ணை பார்த்துக்கலாம்" என்று மட்டும் சொல்லி விடுகிறார். அதோடு இனியாவது நல்ல பொண்ணா பாருங்க, ரோகிணி மாதிரி பெண்ணிடம் சிக்கிக் கொள்ளாமல் இந்த மீனா மாதிரி இன்னொரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்குங்க.. அப்பதான் உங்க வீடு நல்லபடியா இருக்கும் என்று விஜயாவை அசிங்கப்படுத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications