எதிர்நீச்சல் நந்தினி வாழ்க்கையின் மறுபக்கம் இத்தனை சோகங்கள் ஆனதா? பலருக்கும் தெரியாத ரகசியங்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஹரிப்ரியாவின் வாழ்க்கையில் பல்வேறு சோகமான மறுபக்கம் இருக்கிறதாம்.
படிப்பில் கெட்டிகாரியாக இருக்கும் ஹரிப்பிரியா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறாராம். படிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் இவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் நடனத்தையும் முறைப்படி கற்று இருக்கிறாராம்.

ஆரம்பகால வாழ்க்கைஆரம்பகால வாழ்க்கை
ஆரம்ப காலகட்டத்தில் காலேஜ் படிக்கும் போது ஒரு டைரக்டராக ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்போட
இருந்த ஹரிப்ரியா அதற்காகத்தான் விஷ் காம் படித்திருக்கிறாராம். இவர் டைரக்டராக வேண்டும் என்பதற்காக பல இன்டஸ்ட்ரிப் அட்டன்ட் செய்திருக்கிறாராம். அப்போது இவருடைய நண்பர்களும் அம்மாவும் இவர் ஆன் ஸ்கிரீனில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள் .மனதிற்குள் ஆசை இருந்தாலும் இவர் அந்த அளவிற்கு அதில் விருப்பமில்லை என்று தவித்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இவருடைய அம்மா கனா காணும் காலங்கள் ஆடிசனுக்காக பாஃம் எழுதி அனுப்பி கொடுத்து இருந்தாராம் .

கனா காணும் காலங்களில் அறிமுகம்
முதல் சீரியலானா கனா காணும் காலங்கள் சீரியலில் ஹரிப்பிரியா எதிர்பார்க்காத அளவில் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்து விட்டார். முதல் சீரியலில் ஹரிப்ரியா பிரியா என்ற பெயரில் நடித்திருந்தார். .இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விஷ்ணு நடித்திருப்பார் .ஆனால் அந்த சீரியலில் அவருடைய பெயர் அம்மாஞ்சி என்றுதான் இப்ப வரைக்கும் 90ஸ் கிட்ஸ் பலரும் அவரை கூப்பிட்டு வருகின்றனர் .அந்த அளவிற்கு அவர் பிரபலமாகிவிட்டார். அதை தொடர்ந்து பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான மேற்கு மாம்பழத்தில் ஒரு காதல் என்னும் சீரியலில் நடித்து இருந்தார். அந்த சீரியலில் வாணி ராணி சீரியலில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அவரையே ஹரிப்பிரியா காதலித்து திருமணமும் செய்திருந்தார்.

திருமணமும் பிரிவும்
இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒரு சில வருடங்கள் இவருடைய கணவரோடு இவருக்கு மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் பல வீடியோக்களை வெளியிட்டு ஜோடி என்றால் இதுதான் சூப்பர் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு வலம் வந்தனர். இந்த நிலையில் இவருக்கும் இவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு ஹரிப்பிரியாவின் வாழ்க்கையில் பல போராட்டங்கள் ஏற்பட்டிருக்கிறது. முதல் திருமணம் இவர் எதிர்பார்க்காத வகையில் முடிவடைந்து விட்டாலும் அதனைத் தொடர்ந்து இவர் பல சீரியல்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதுவரைக்கும் சுமார் 20 சீரியல் நடித்து இருக்கிறாராம். அதிலும் அதிகமான சீரியல்கள் சன் டிவியில் தான் நடித்திருக்கிறார்.

நெகட்டிவ் கேரக்டர்
ஹரிப்பிரியாவுக்கு அதிக அளவில் பெயர் வாங்கி கொடுத்த சீரியல்களில் பிரியமானவள் சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் இசை கேரக்டரில் நடித்திருப்பார். இவர் அதிகமான பாசிடிவ் கேரக்டர் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு கண்மணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததால் இவருக்கு நெகடிவ் ஆனா பல கமெண்ட்கள் வந்த வண்ணமாகவே இருந்தது. அது மட்டுமில்லாமல் பலரும் இவருக்கு இந்த மாதிரி கேரக்டர் உங்களுக்கு செட் ஆகாது என்று அறிவுரை கூறி வந்தனர். இந்த நிலையில் இவர் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அசாருடன் நட்பாக பழகி வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் என்ற செய்திகள் பரவி வந்தது இதை குறித்து இது என்னுடைய பர்சனல் விஷயம் அதில் யாரும் தலையிட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதில் கொடுத்திருந்தார் .தற்போது எதிர்நீச்சல் நந்தினியாக நடித்து வருகிறார்.

ரசிகர்களை கவர்ந்த நந்தினி
இதுவரைக்கும் இவர் எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் நந்தினி கேரக்டர் ஹரிப்பிரியாவுக்கு அப்படியே செட் ஆகின்றது என சீரியலில் இவரோடு நடித்த நடிகர்களும் கூறி வருகின்றனர். எப்போதும் சூட்டிங் ஸ்பாட்டில் நந்தினி எப்படி சீரியல் இருக்கிறாரோ அதுபோலத்தான் ஜாலியாக இருப்பாராம். தன்னுடைய ஒரே பையனோடு தனியாக வசித்து வரும் ஹரிப்ரியா நந்தினி கேரக்டர் மூலமாக தன்னுடைய கடந்த கால கசப்பான வாழ்க்கையை மறந்து சந்தோஷமாக இருந்து வருவதாகவும், இப்போது இவருடைய மகனும் ஹரிப்பிரியாவுக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்து வருவதாகவும் அவருடைய நண்பர்கள் தெரிவித்து இருக்கின்றனர். எதிர்நீச்சல் சீரியலில் நந்தினிக்காகவே ரசிகர்கள் கூட்டம் இந்த சீரியலை தொடர்பு பார்த்து வருவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்னதான் சீரியலில் விறுவிறுப்பான கதைக்களம் இருந்தாலும் இந்த சீரியலில் காமெடிக்கு காரணம் நந்தினி ஆகத்தான் இருக்க முடியும் என்பது பலருடைய கருத்து.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே












Click it and Unblock the Notifications