முதல் முறை விக்ரமன் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சி செய்தியை கூறி இருக்கிறார்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் முதல் முறையாக நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு இந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று நெகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார்.
பொங்கல் நாளில் மக்கள் அறம் வெல்லும் என்று கோலம் போட்டதை வைத்து தனக்கு கிடைத்த வெற்றி ஆக மகிழ்ந்திருக்கிறார்.
விரைவில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும் அதை அபிசியல் ஆக விரைவில் கூறுவேன் என்று விக்ரமன் கூறி இருக்கிறார்.
PR டீமின் அக்ரீமெண்ட் முடிந்து விட்டதா? அசீமை கலாய்த்து 2வது நாளும் வலம் வரும் கருத்துக்கள்!
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆனாலும் இந்த நிகழ்ச்சியின் தாக்கத்திலிருந்து அதிகமான ரசிகர்கள் வெளியே வராமல் இருக்கின்றனர். காரணம் டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என்று ஆரம்பத்தில் இருந்து அடித்து கூறி தங்களுடைய மனதில் பதிய வைத்திருந்த நிகழ்வு கடைசி நேரத்தில் அழிக்கப்பட்டதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் புலம்பி கொண்டிருக்கின்றனர். பல ரசிகர்கள் விஜய் டிவியையும் ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியையும் புறக்கணித்து வருகின்றனர்.
முதல் வீடியோ
இந்த நிலையில் விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து விக்ரமன் எப்போது பேசுவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. அந்த வீடியோவில் விக்ரமன், வணக்கம் உங்க எல்லோருக்கும் நான் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்க விரும்புகிறேன். நீங்க எவ்வளவு சப்போர்ட் என் மேல காட்டுனீங்க என்பதை வீட்டுக்குள்ள இருந்து வெளியே வந்த பிறகு தான் என்னால உணர முடிஞ்சது. அவ்வளவு அன்பும் ஆதரவும் ஆர்கனிகா, தன்னிச்சையாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் காண்பித்ததற்கு மிகப்பெரிய நன்றி என்று கூறி இருக்கிறார்.
பொங்கல் நாள் கோலம்
அதற்கு ஒரு சின்ன உதாரணம் கூற வேண்டும் என்றால் பொங்கல் நாளில் தாய்மார்கள் வீட்டு வாசலில் கோலம் போடும் போது அறம் வெல்லும் என்பதையும் சேர்த்து போட்டு இருக்கீங்க, இதைவிட பரிசு வேற என்னவாக இருக்க முடியும். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய அன்புக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன். இருந்தாலும் உங்களுடைய மனநிலை என்ன என்பதை நான் உணர்கிறேன். இது வந்து உங்களுக்கு வெறும் நன்றி கூறியதற்கு உள்ள வீடியோ இல்லை.
விரைவில் சந்திப்பு
நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் அது என்னவென்றால் நான் உங்களை சந்திக்க வேண்டும். அந்த மீட் விரைவில் நடக்கப் போகிறது. அது எப்போ என்பதை அபிஷியலாக நான் அனேன்ஸ் செய்கிறேன். சோ மறுபடியும் சொல்கிறேன், உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. "அறம் வெல்லும்" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை சில நிமிடங்களில் அதிகமான ரசிகர்கள் லைக் செய்து இருக்கின்றனர். பலர் இதை பகிர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர் .இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளராகவும் விக்ரமனின் நண்பராகவும் இருந்த எடிகே இந்த வீடியோவிற்கு "உன்னை பார்க்க வரும் வழியில் நானும்" என்கிற கருத்தை வெளியிட்டு இருக்கிறார். இதையும் பலர் பாராட்டி வருகிறார்கள்.