உக்ரைன் நாட்டில் வசிக்கும் இளைஞருடன் ஆன்லைனில் கல்யாணம் முடித்த இளம் பெண்
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த உக்ரைனில் வசிக்கும் இளைஞரை , கேரள இளம் பெண் ஆன்லைனில் மணமுடித்துள்ளார். இந்த திருமணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. ஆன்லைனில் திருமணம் நடப்பது கேரளாவில் இதுவே முதல்முறையாகும்,
திருமணங்கள் என்பது மணமகன், மணமகள் சேர்ந்து செய்யும் சடங்கு. இந்த பாழாய் போன கொரோனா 90ஸ் கிட்ஸ் இளைஞர்களின் கனவை நசுக்கிவிட்டது. அதில் தப்பித்தவர்கள் சிலரே. குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்கள் திருமணத்திற்கு கூட வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்தியாவிற்கு செல்ல விமானம் இல்லாதது. அப்படியே இருந்தாலும், அங்கிருந்து வந்துவிட்டு மீண்டும் செல்வதற்கு விமானம் இல்லாதது போன்ற காரணங்களால் வர முடியாத நிலையில் பல திருமண ஜோடிகள் தவிக்கின்றன. இந்நிலையில் ஓரளவு நிலைமை சரியாகி இப்போது தான் உலகம் இயல்பு நிலை நோக்கி வந்தது. ஆனால் கொரோனா 3வது அலை பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

உக்ரைன்
இதன் காரணமாக மீண்டும் பல்வேறு நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. இந்நிலையில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஜீவன்குமார். இவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருவனந்தபுரம் கழக்கூட்டத்தை சேர்ந்த தன்யாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கேரளா வரவில்லை
இருவரும் கடந்த மார்ச் மாதம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய புனலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜீவன்குமாரால் குறிப்பிட்ட நாளில் சொந்த ஊரான கேரளாவுக்கு வர இயலவில்லை. இதையடுத்து ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதிக்கக்கோரி இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

அனுமதி
இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இது தொடர்பாக வெளியுறவு துறை, தகவல் தொழில் நுட்பத்துறையிடம் கருத்து கேட்டது. இதை பரிசீலித்த இரு துறைகளும் ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து சனிக்கிழமை புனலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மணமகள் தன்யா, மணமகன் ஜீவன்குமாரின் தந்தை தேவராஜன் மற்றும் இருவீட்டார் உறவினர்கள் வந்திருந்தனர்.

ஆன்லைனில் தயார்
இதே வேளையில் உக்ரைன் நாட்டில் ஜீவன்குமாரும் ஆன்லைனில் தயாராக இருந்தார். இதையடுத்து சார்-பதிவாளர் டி.எம்.பிரோஸ் முன்னிலையில் ஆன்லைனில் காணொலி காட்சி மூலம் இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது, மணமகன் சார்பில் அவரது தந்தை தேவராஜன் பதிவேட்டில் கையெழுத்து போட்டார்.

ஆன்லைன் கல்யாணம்
இந்த திருமணத்தை மாவட்ட பதிவாளர் சி.ஜே.ஜான்சன் ஆன்லைன் மூலம் கண்காணித்தார். திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமகள் தன்யாவுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆன்லைனில் திருமணம் நடப்பது கேரளாவில் இதுவே முதல் முறையாகும். கேரள மாடல் திருமணம் ஆக வருங்காலத்தில் ஆன்லைன் திருமணங்கள் இந்தியா முழுவதும் நடந்தாலும் ஆச்சர்யமில்லை.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications