அடுத்த மூவுக்கு தயாராகும் ஸ்டாலின்! கண்ணூர் மாநாடு ஜனநாயக முன்னணியை உருவாக்கும் என நம்பிக்கை
திருவனந்தபுரம்: கண்ணூரில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அடிப்படைவாத சக்திகளுக்கு எதிரான ஜனநாயக முன்னணியை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 வது ஆண்டு மாநில மாநில மாநாடு இன்று நிறைவடைந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கண்ணூருக்கு சென்றடைந்தார். அவரை விமான நிலையம் சென்று கேரள மாநில அமைச்சர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

ஒற்றைத்தன்மையை நிலைநாட்ட பாஜக முயற்சி
இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அந்த மாநாட்டில் மத்திய - மாநில உறவுகள் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். "பாஜக அரசு வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து ஒற்றைத்தன்மையை நிலைநாட்ட நினைக்கிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே மதம்
ஆங்கிலேயர்கள் கூட இத்தனை அதிகாரம் மிக்க ஒற்றைத் தன்மையை கொண்டு வர முயற்சி செய்யவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே மதம் என மாற்ற மத்திய பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் மாநிலங்களை காக்க வேண்டும். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு. மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பாஜக அரசு பழிவாங்கிக்கொண்டு இருக்கிறது.

தென்மாநில முதல்வர்கள் குழு
மாநிலங்களின் உரிமைகளுக்காக போராட தென் மாநில முதலமைச்சர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள இந்த குழு வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்ய முயல்வதுதான் சட்டத்தின் ஆட்சியா? ஜனநாயகத்தை மரணிக்க செய்பவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இரு முறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தாமதித்து தொடர்ந்து இழுத்தடித்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ரவி." என்றார்.

ஜனநாயக அமைப்புகளின் முன்னணி
இந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கண்ணூர் மாநாடு பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், ""கண்ணூர் மாநாடு அடிப்படைவாத சக்திகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்புகளின் முன்னணியை உருவாக்கும். கண்ணூர் மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய நம்பிக்கையை தரும் என நம்புகிறேன்" எனக்குறிப்பிட்டு உள்ளார்.
-
கல்வி தான் யாராலும் அழிக்கவே முடியாத ஆயுதம்! ஒரு லேப்டாப் இருந்தாலே உலகம் உங்கள் கையில்.!- உதயநிதி -
ஜன.7ம் தேதி தஞ்சையில் உள்ளூர் விடுமுறை.. குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்! -
பொங்கலுக்கு மழை இருக்கு.. வெதர்மேன் சொன்ன அப்டேட்! விவசாயிகளுக்கு வார்னிங் -
டெல்டா மாவட்டங்களுக்கு சம்பவம் இருக்கு.. கொட்டப்போகும் கனமழை! தேதி குறித்த வானிலை மையம் -
ஓவர் கான்ஃபிடன்ஸ்..திமுகவை கடுப்பேற்றிய காங்கிரஸ்! 2வது ஆப்ஷனை காட்டியதும் மிரண்ட டெல்லி..என்னாச்சு? -
தமிழ்நாட்டிற்கு வந்து இறங்குவதற்கு முன்பாகவே தமிழில் ட்வீட் செய்து திமுக அரசை சீண்டிய அமித் ஷா -
உச்சக்கட்ட அதிருப்தி.. கூவம் ஆற்றில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்! தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் -
கூட்டணியின்றி வெல்ல முடியாது.. அதிகாரப்பகிர்வு பற்றி பேசப்பட வேண்டிய நேரம் இது! - மாணிக்கம் தாகூர் -
பள்ளி திறக்கும்.. வகுப்பு நடக்காது? தொடரும் ஆசிரியர் போராட்டம்! முதல் நாளே மாணவர்கள் பாதிப்பு! -
அரையாண்டு லீவு முடிஞ்சது.. இன்று தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! தலைமையாசிரியர்களுக்கு பறந்த அட்வைஸ்! -
கண்ணா 3 லட்டு திண்ண ஆசையா! பொங்கல் பரிசு + ரூ.3000 + வேட்டி சேலை! இன்று வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்.. தமிழக அரசுக்கு நிதிச்சுமை! ஆனாலும் சமாளிக்கலாம்.. ப.சி கொடுத்த ஐடியா!












Click it and Unblock the Notifications