Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மது அருந்தியதை காரணமாக கூறி காப்பீட்டுத் தொகையை மறுக்க முடியாது - கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: விபத்தில் சிக்கியவர் மது அருந்தியிருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை மறுக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

கொச்சியை சேர்ந்த கேரள குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர், கடந்த 2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி அங்குள்ள நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தவறான திசையில் வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார். அவர் நேஷனல் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ. 7 லட்சத்துக்கு காப்பீடு வைத்திருந்தார். இந்த விபத்தை தொடர்ந்து, அவரது மனைவி தனது கணவரின் காப்பீடு பணத்தை வழங்கக் கோரி அந்த நிறுவனத்தை அணுகினார்.

 மது அருந்தியதால் பணம் தர மறுப்பு

மது அருந்தியதால் பணம் தர மறுப்பு

ஆனால், அந்த காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள், காப்பீட்டு பணத்தை வழங்க முடியாது எனக் கூறியுள்ளனர். விபத்தில் உயிரிழந்த நபர், மது அருந்தியிருப்பதாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், காப்பீடு பணத்தை கோர முடியாது என அவரது மனைவியிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, தனக்கு தனது கணவரின் காப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிடக் கோரி அந்தப் பெண் தீர்ப்பாயத்தை அணுகினார்.

 காப்பீட்டு பணம் தர உத்தரவு

காப்பீட்டு பணம் தர உத்தரவு

இதனை விசாரித்த தீர்ப்பாயம், "உயிரிழந்த நபர் சரியான பாதையில் தான் சென்றிருக்கிறார். ஆனால் எதிரே வந்த லாரி தான், தவறான திசையில் வந்ததோடு மட்டுமல்லாமல் கார் ஒன்றை முந்தி செல்ல முயற்சித்துள்ளது. அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே எந்த தவறும் செய்யாத நபருக்கு காப்பீடு தொகையை வழங்க முடியாது எனக் கூறுவது நியாயமல்ல. அதனால் காப்பீடு தொகையை அவரது மனைவிக்கு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டது.

 மது அருந்தினால் காப்பீட்டுத் தொகை கிடையாதா?

மது அருந்தினால் காப்பீட்டுத் தொகை கிடையாதா?

இந்த உத்தரவுக்கு எதிராக நேஷனல் காப்பீட்டு நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி ஷாஜி பி. சாலி இன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருவர் மது அருந்தி இருந்தார் என்ற ஒற்றை காரணத்துக்காக அவரது காப்பீட்டுத் தொகையை யாரும் கோர முடியாது என காப்பீட்டு நிறுவனங்கள் சொல்லக் கூடாது.

 உடனே வழங்க உத்தரவு

உடனே வழங்க உத்தரவு

இந்த வழக்கில், உயிரிழந்த நபர் விபத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, அவர் போக்குவரத்து விதிகளின்படி சரியான பாதையில்தான் சென்றுள்ளார். அப்படி இருக்கும் போது, அவரது காப்பீட்டு தொகையை அவரது குடும்பத்தாருக்கு வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது? மது அருந்துவதற்கும், மது அருந்தி தன்னிலை மறப்பதற்கும் நிறைய வித்திாயசங்கள் இருக்கின்றன. இந்த வழக்கை பொறுத்தவரை, உயிரிழந்த நபர் மது அருந்தியதால் சுய கட்டுப்பாட்டை இழந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே அந்த நபரின் காப்பீட்டுத் தொகையான ரூ.7 லட்சத்தை அவரது மனைவிக்கு உடனே வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+