பாடம் கற்காத மலேசியா அரசு!

அண்மையில் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் மோசமான தோல்வியை சந்தித்த போதிலும் அதன் அமைச்சர்கள் இன்னும் தொடர்ந்து மக்களிடம் பொய் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்தத் தோல்வியிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் கற்றுக் கொள்ளவில்லையா? அறிவுக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு நம்மை அவமதிக்கும் போக்கை அவர்கள் எப்போது நிறுத்தப் போகிறார்கள்? ஒவ்வொரு முறையும் ஒரு தேசிய முன்னணி அமைச்சர் வாய் திறக்கும்போதும் ஏதாவது பொய் சொல்லுகிறார்கள் அல்லது மனம் நோகும்படி பேசுகிறார்கள்.
மக்கள் ஓசை தமிழ் நாளிதழை தடைசெய்ய அரசாங்கம் முடிவு செய்ததற்கான காரணம் அது இன நல்லிணக்க வரம்பு முறைகளை மீறியதுதான் என உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பார் கூறியிருக்கலாம்.
பிரதமரின் மருமகன் இண்ட்ராப் தலைவர்களையும் ஆதரவாளர்களையும் 'நடைபாதை குரங்குகள்" என கூறியது மத நல்லிணக்கத்திற்கு மருட்டலான செய்கை அல்லவா? “எங்களுக்கு ஊடக வழிகாட்டிகள் இருக்கின்றன நாங்கள் விருப்பம்போல் அச்சக பர்மிட்டுக்களை ரத்துச்செய்ய முடியாது. மக்கள் ஓசை பர்மிட்டை நாங்கள் ரத்து செய்யவில்லை ஆனால் அதனை புதுப்பிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறது" என்று சைட் அமிட் கூறுகிறார்.
“ரத்து செய்யப்பட்டது" என்பதற்கும் “தொடர அனுமதி வழங்கப்படவில்லை" என்பதற்கும் என்ன வேறுபாடு?
பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சியினரின் செய்திகளுக்கு மக்கள் ஓசை நாளிதழ் சற்று அதிகமாக இடம் கொடுத்திருந்தது உண்மைதான். அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்திய சமூகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. தேசிய முன்னணி அரசாங்கம் பல பொய் வாக்குறுதிகளையும் தீவிரமான தவறுகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது. அதன் தலைக்கனம் குறையவில்லை.
தேர்தலில் கடுமையாக வீழ்ந்த பின்னரும் தொடர்ந்து வாக்குறுதிகளை அவர்கள் அள்ளி வீசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் பாடம் கற்றிருப்பர்கள் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இல்லை. தொடர்ந்து இந்திய சமூகத்திற்கு சினம் ஊட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தப்போக்கு தொடர்ந்தால் தேசிய முன்னணி தொடர்ந்து இருக்குமா என்பது கேள்விகுறிதான்.
-ஜோசுவா புருஷோத்தமன்([email protected])
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications