இன்று வீர வாஞ்சிநாதன்நினைவுநாள்-நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி
அன்று இந்திய விடுதலைக்காக போராடிய வீரர்களில் 28 வயது பிராமண வகுப்பை சேர்ந்த கேரள வனத்துறை பணியாளர் வீரவாஞ்சியும் ஒருவர். ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கலெக்டர் அதிகாரமும, அந்தஸ்தும், சக்தியும் கொண்டவர் ஆவார். அவருடைய அதிகார வரம்பு இன்றைய காலகட்டத்தை போல் அல்லாமல் பல மாவட்டங்களை உள்ளடக்கிய விரிவாதாகவே இருந்தது.
போலீஸ்காரர்களை கண்டாலே ஓடி ஓளியும் இந்தியர்கள் நிரம்பியிருந்த நேரம்.. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பரம்பரையை சேர்ந்த பாளையக்காரர்களும், குறு நில மன்னர்களும் கூட வேலூர் புரட்சிக்கு பின் முற்றிலுமாக தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி ஆங்கிலேயனுக்கு அடங்கி போனார்கள்.
கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. அட்டூழியங்கள் பெருகியது. ஆங்கிலேயனின் கொடுமைகள் அதிகரித்தன. பொறுத்தது போதும் என்று ஒரு இளைஞர் பட்டாளம் ஆங்கிலேயனுக்கு சரியான சம்மட்டி அடி கொடுக்க தயாராகி அதற்கான களப்பணிகளிலும் இறங்கியது.
தென்மலை, செங்கோட்டை, குற்றாலம், ஐந்தருவி என பல்வேறு ஊர்களில் வனப்பகுதிக்குள் ரகசிய கூட்டம் போட்டனர். துப்பாக்கி சுடும் பயிற்சிகளை ரகசியமாக மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் ஹிட்லர் போல் வலம் வந்த அப்போதைய ஆட்சி தலைவரான வில்லியம் ஆஷ்துரையின் செயல்கள் மிகவும் எல்லை மீறி வருவதை உணர்ந்த அந்த இளைஞர்கள் பட்டாளம் ஆஷ்துரையை தீர்த்து கட்ட களம் தேடியது. கண்காணிப்பையும் தொடங்கியது. நாட்கள் நகர்ந்தன.
ஆஷ்துரை நெல்லையில் இருந்து ரயில் மூலம் மணியாச்சி வழியாக குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு போகும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஆனந்தம் கொண்டனர். 12 இளைஞர்களும் தயாரானார்கள். தலா 2 பேர் வீதம் ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு பணிகளை தேர்ந்தெடுத்தனர். அதில் வீர வாஞ்சிநாதனுக்கும், சாவடி அருணாசலப்பிள்ளைக்கும் ஆஷ்துரையை சுடும் பணி தானாகவே வந்தது. 1911ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி மணியாச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கியோடு வீர வாஞ்சிநாதனும், சாவடி அருணாசலப் பிள்ளையும் காத்திருந்தனர்.
ஆஷ் துரை தனது மனைவியோடு முதல் வகுப்பு ரயில் பெட்டியில் அமர்ந்திருந்தார். ஆஷ்துரையின் இறுதிகாலம் முடிவை எட்டும் நெருங்குகிறது. வீரவாஞ்சி கைத்துப்பாக்கியோடு ஆஷ்துரை அமர்ந்திருக்கும் பெட்டியில் திடீர் பிரவேசம் செய்து ஆஷ்துரைக்கு துப்பாக்கி குண்டுகளை பரிசளிக்க அங்கேயே ஆஷ் சரிந்து விழுந்தார். விவேகம் கொண்ட வீரஇளைஞன் வீரவாஞ்சி அதே ரயில் பெட்டியின் கழிவறையில் புகுந்து சரியாக காலை 10.50க்கு தன்னை தானே சுட்டு களச்சாவு அடைந்தார்.
நெல்லை கலெக்டர் ஆஷ்துரை சுட்டு கொல்லப்பட்ட தகவல் போதிய தகவல் வசதி இல்லாத காலகட்டத்திலேயே தேசமெங்கும் பரவியது.
ஜூன் 19ம் தேதி பிரிட்டிஷ் பார்லிமெண்டில் கூட ஆவேசமாக பேசப்பட்டது. ஆங்கிலேயனுக்கு அன்று முதல் மரண பீதி தொற்றிக் கொண்டது. தமிழனை கண்டாலே ஒவ்வொருவனுக்கும் வீரவாஞ்சிநாதன் தெரிந்தான். அந்த வீரமிக்க மாமனிதனுக்கு இன்று செங்கோட்டையில் அமைந்துள்ள அவரது நடுக்கல்லுக்கு காலை 10.50க்கு தியாகிகள் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு விரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?













Click it and Unblock the Notifications