For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

103. குடிசெயல் வகை

By Staff
Google Oneindia Tamil News

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
வெருமையிற் வீடுடைய தில்.

(1021)

விளக்கம்:

"என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓய மாட்டேன்" என்னும் பெருமையைப் போல், ஒருவனுக்குச் சிறந்த பெருமை தருவது வேறில்லை.


ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

(1022)

விளக்கம்:

"முயற்சியும், நிறைந்த அறிவும்" என்று சொல்லப்பட்ட இரண்டனையும் உடைய, இடைவிடாத கருமச் செயலால் ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும்.


குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்..

(1023)

விளக்கம்:

"என் குடியைப் புகழால் உயரச் செய்வேன்" என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு தெய்வமும் மடியை உதறிக் கொண்டு முன்வந்து உதவி நிற்கும்.


சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

(1024)

விளக்கம்:

தம் குடியை உயர்த்துவதற்கு இடைவிடாமல் முயல்கிறவர்களுக்கு அதன் வழி பற்றி அவர் ஆராயும் முன்பே தெய்வ உதவியால் அது தானாகவே முடிந்து விடும்.


குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

(1025)

விளக்கம்:

குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன் குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி, உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள்.


நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

(1026)

விளக்கம்:

"ஒருவனுடைய நல்லாண்மை" என்பது தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை அவன் தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும்.


அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

(1027)

விளக்கம்:

அமரகத்தில் வன்கண்மை உடையவரே போரைத் தாங்குவார். அதுபோலக் குடியிற் பிறந்தவர் பலரானாலும், வல்லமை உடையவரே அதனைத் தாங்கிக் காப்பவர்.


குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்.

(1028)

விளக்கம்:

தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருத வேண்டும். மற்றுக் காலத்தைப் பார்த்து, மானத்தையும் கருதினால், குடி கெடும். ஆகவே அவருக்குக் காலநியதி இல்லை.


இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.

(1029)

விளக்கம்:

தன் குடி குற்றம் அடையாமல் காக்க முயல்பவனின் உடம்பு, அம்முயற்சித் துன்பத்திற்கே ஓர் கொள்கலமோ? அது ஒழிந்து, அது இன்பத்திற்கும் கொள்கலம் ஆகாதோ?


இடுக்கன்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இல்லாத குடி.

(1030)

விளக்கம்:

துன்பம் வரும்போது அதைத் தாங்கி காக்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியானது, துன்பமாகிய நவியம் புகுந்ததால் வீழ்கின்ற மரம் போல வீழும்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X