For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

106. இரவு

By Staff
Google Oneindia Tamil News

இரக்க இரத்தக்கார்க் காணின் சுரப்பின்
அவர்பழி தம்பழி யன்று.

(1051)

விளக்கம்:

தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம். அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால் அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை.


இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

(1052)

விளக்கம்:

ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும்.


கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

(1053)

விளக்கம்:

ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும் அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும்.


இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

(1054)

விளக்கம்:

ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும் அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும்.


கரப்பிலார் வையகத்து உண்மையாற் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

(1055)

விளக்கம்:

முன்னால் நின்றபோதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான் உயிரைக் காக்கும் பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர்.


கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

(1056)

விளக்கம்:

உள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால் மானம் விடாமல் இரப்பவருக்கு அவர் வறுமைத் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே அவரை விட்டுப் போய்விடும்.


இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

(1057)

விளக்கம்:

தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால் இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு.


இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

(1058)

விளக்கம்:

வறுமையால் இரப்பவர் இல்லையானால் குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகினரின் போக்கும் வரவும் மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற் போன்றதாகும்.


ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

(1059)

விளக்கம்:

தம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாதபோது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும் இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்.


இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

(1060)

விளக்கம்:

இரப்பவன் ஒருபோதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்க வேண்டும். பொருள் வேண்டிய பொழுது வந்து உதவாது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X