For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

111. புணர்ச்சி மகிழ்தல்

By Super
Google Oneindia Tamil News

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.

(1101)

விளக்கம்:

கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும் ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளன.


பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோயக்குத் தானே மருந்து.

(1102)

விளக்கம்:

நோய்க்கு மருந்தாக அமைவன வேறான பொருள்கள். அவ்வாறு இல்லாமல் அணி புனைந்த இவளால் நமக்கு வந்த நோய்க்கு, இவள் தானே மருந்தும் ஆயினாள்.


தாம்வீழ்ார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணுன் உலகு.

(1103)

விளக்கம்:

தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள்மேல் துயிலும் இன்பத்தைப் பேலாத் தாமரைக் கண்ணானின் போக உலகத்து இன்பமும் இனிதாக இருக்குமோ ?


நீங்கின் தொறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

(1104)

விளக்கம்:

தாம் தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும் , அருகில் நெருங்கினால் குளிர்தலுமாகிய நெருப்பை , இவள்தான் , எவ்விடத்திலிருந்து பெற்றுள்ளாளோ ?


வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

(1105)

விளக்கம்:

தாம் த விரும்பியபொழுது அவையவை தரும் இன்பத்தைப்போல இன்பம் தருவன, மலரணிந்த கூந்தலெ உடையவளான இவள் தோள்கள் தருகின்ற இன்பம்.


உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

(1106)

விளக்கம்:

அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்.


தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை மமுயக்கு.

(1107)

விளக்கம்:

தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளெத்தழுவிப் பெறுகின்ற இன்பம் .


வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

(1108)

விளக்கம்:

காற்றும் இடையிலே புகுந்து பிளந்துவிடாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிமைதரும் நல்ல இன்ப உறவாகும் .


ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

(1109)

விளக்கம்:

ஊடலும், அதனெ அளவோடு அறிந்து தெளிவித்தலும், பின்னர்க் கூடுதலும், என்னும் இவை எல்லாம், காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாகும்.


அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

(1110)

விளக்கம்:

ஒன்றை அறியும்போது, முன்னிருந்து அறியாமையைக் கண்டாற்போல, செறிவான சிவந்த அணிகளை உடையவளெச் சேருந்தோறும், காமஇன்பமும் உண்டாகின்றது.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X