For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

113. காதல் சிறப்பு உரைத்தல்

By Super
Google Oneindia Tamil News

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

(1121)

விளக்கம்:

பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற்போல மிகுந்த சுவையினெ உடையதாகும்.


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்னந
மடந்தையொடு எம்மிடை நட்பு

(1122)

விளக்கம்:

இம் மடந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும்.


கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லெ இடம்.

(1123)

விளக்கம்:

கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக! யாம் விரும்புகின்ற அழகிய நுதலெ உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லெ.


வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னன் நீங்கும் இடத்து.

(1124)

விளக்கம்:

இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும்போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலெயே தருகின்றாள்.


உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

(1125)

விளக்கம்:

ஒள்ளியவாய் அமர்த்த கண்களெ உடையவளின் குணங்களெ மறப்பதற்கே அறியேன்; அதனால், யான் அதை எப்போதாயினும் நினெப்பதும் செய்வேனோ !


கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எங் காத லவர்.

(1126)

விளக்கம்:

எம் காதலுக்கு உரியவர் எம் கண்களிலிருந்து ஒருபோதுமே நீங்கார்; எம் கண்களெ இமைத்தாலும் வருந்தார்; அவ்வளவு நுண்ணியவர் அவர்.


கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.

(1127)

விளக்கம்:

காதலுக்கு உரியவரான அவர் என் கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினெத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன்.


நெஞ்சத்து காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

(1128)

விளக்கம்:

காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கிறார். அதனால் அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்.


இமைப்பிற் கரப்பாக்கு அறிவில் அனெத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்.

(1129)

விளக்கம்:

இமைப்பின் அவர் மறைவார் என்று, கண்களெ மூடாமலே துயிலொழித்துக் கிடப்போம்; அவ்வளவிற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே.


உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்.

(1130)

விளக்கம்:

எம் உள்ளத்துள்ளே அவர் உவப்போடு உள்ளார்; இருந்தும், பிரிந்து போய்விட்டார்; அதனால் அன்பில்லாதவர் என்றும் இவ்வூர் அவர்மேல் பழி கூறுகின்றதே!

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X