For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

115. அலர் அறிவுறுத்தல்

By Staff
Google Oneindia Tamil News

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனெப்
பலரறியார் பாக்கியத் தால்.

(1141)

விளக்கம்:

ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அஃது என் நல்வினெயின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.


மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

(1142)

விளக்கம்:

குவளெ மலரைப்போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளெ எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினெத் தந்தார்களே


உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனெப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

(1143)

விளக்கம்:

ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனெயும் சென்று சேராதோ. சேருமாதலால், அதனெப் பெறாதைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன்.


கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

(1144)

விளக்கம்:

ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது. அதுவும் இல்லெயானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே.


களித்தோறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது.

(1145)

விளக்கம்:

களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலெ விரும்பினாற்போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட, மேலும் இனிமையாகின்றது.


கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களெப் பாம்புகொண் டற்று.

(1146)

விளக்கம்:

அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள்தான்; திங்களெப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற்போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே.


ஊரவர் கெளவை எருவாக அன்னெசொல்
நீராக நீளுமிந் நோய்.

(1147)

விளக்கம்:

இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச்சொற்களெ எருவாகவும், அதுகேட்டு அன்னெ சொல்லும் கடுஞ்சொல்லெ நீராகவும் கொண்டு வளர்கின்றது.


நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

(1148)

விளக்கம்:

பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம் என்று முயலுதல் நெய்யால் நெருப்பை அவிப்போம் என்பது போன்ற அறியாமைச் செயலாகும்.


அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

(1149)

விளக்கம்:

"அஞ்சாதே, பிரியேன்" என்று என்னெத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அலருக்கு நாணவும் நம்மால்இயலுமோ


தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை யெடுக்கும் இவ்வூர்.

(1150)

விளக்கம்:

யாம் விரும்புகின்ற அலரினெ இவ்வூரவரும் எடுத்துக் கூறுகின்றனர்; அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினெச் செய்வார்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X