For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

120. தனிப்படர் மிகுதி

By Staff
Google Oneindia Tamil News

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

(1191)

விளக்கம்:

தாம் விரும்பும் காதலர் தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்லின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப்பெற்றவர்கள் ஆவார்.


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

(1192)

விளக்கம்:

தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர் வாழ்பவர்க்கு, வானம் மழை பெய்துஉதவினாற் போன்றதாகும்.


வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு.

(1193)

விளக்கம்:

காதலரால் விரும்பப் படுகிறவருக்கு, இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம் என்னும்செருக்குப் பொருந்துவது ஆகும்.


வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வீர்
வீழப் படாஅர் எனின்.

(1194)

விளக்கம்:

தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப் படும் தன்மையைப் பெறாதவர் என்றால், அம்மகளிர், முன் செய்த நல் வினைப்பயனை உடையவரே அல்லர்.


நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.

(1195)

விளக்கம்:

நாம் காதல் கொண்டவர், நம்மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத்தான் செய்யப் போகின்றார்.


ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலை யானும் இனிது.

(1196)

விளக்கம்:

காதல் ஒருதலையானது என்றால் மிகவும் துன்பமானது; காவடித்தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடிஇருந்ததானால் , அதுவே மிக இனிமையானது.


பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகுவான்.

(1197)

விளக்கம்:

இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டுமே காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன்காண மாட்டானோ?


வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணா இல்.

(1198)

விளக்கம்:

தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மைஉடையவர்கள் யாரும் இல்லை.


நசை இயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

(1199)

விளக்கம்:

யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும்,காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது.


உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

(1200)

விளக்கம்:

நெஞ்சமே ! நின்னிடம் அன்பற்றவர்க்கு நின் நோயைச் சென்று செல்லுகிறாயே; அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு நீயும்முயல்வாயாக.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X