For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

121. நினைந்தவர் புலம்பல்

By Staff
Google Oneindia Tamil News

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

(1201)

விளக்கம்:

நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில்இனிமை தருவதாகும்.


எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்.

(1202)

விளக்கம்:

யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும்ஒரு வகையில் இனிமையானதே.


நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

(1203)

விளக்கம்:

தும்மல் எழுவதுபோலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே. அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்துநினையாமற் போயினாரோ.


யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

(1204)

விளக்கம்:

எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும்நிறைந்திருக்கின்றோமோ?


தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல் .

(1205)

விளக்கம்:

தம்முடைய நெஞ்சில் எம்மை வர விடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப்பற்றிவெட்கப்பட மாட்டாரோ?


மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

(1206)

விளக்கம்:

காதலரொடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால்தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால்தான் நான் அவரைப்பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?


மறப்பின் எவனாவன் மற்கொல் மறிப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

(1207)

விளக்கம்:

அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால் அந்த நினைவும் என்உள்ளத்தைச் சுடுகின்றதே


எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

(1208)

விளக்கம்:

காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என் மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும்சிறந்த உதவியே அதுதான்.


விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

(1209)

விளக்கம்:

நாம் இருவரும் வேறானவர் அல்லேம் என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என்இனிய உயிரும் அழிகின்றதே.


விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

(1210)

விளக்கம்:

மதியமே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலார என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும்வானத்தில் மறையாமல் இருப்பாயாக.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X