For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

123. பொழுதுகண்டு இரங்கல்

By Super
Google Oneindia Tamil News

மாலையோ அல்ல மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

(1221)

விளக்கம்:

பொழுதே, நீ மாலைக் காலமே அல்ல. காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும்முடிவுக் காலமே ஆவாய்.


புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

(1222)

விளக்கம்:

மயங்கிய மாலைப் பொழுதே, எம்மைப்போலவே நீயும் துன்பமுற்று தோன்றுகிறாய். நின் துணையும் என் காதலரைப் போலவேஇரக்கம் இல்லாதவரோ?


பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.

(1223)

விளக்கம்:

பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போதுவருகின்றது போலும்.


காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

(1224)

விளக்கம்:

காதலர் அருகே இல்லாதபோது கொலை செய்யும் இடத்தில் ஆறலைப்பார் வருவதைப்போல், இம் மாலையும் என் உயிரைக்கொல்வதற்காகவே வருகின்றதே.


காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

(1225)

விளக்கம்:

காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான்செய்த தீமையும் யாதோ?


மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.

(1226)

விளக்கம்:

மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை காதலர் என்னைவிட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான்அறியவே இல்லையே.


காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

(1227)

விளக்கம்:

காலையில் அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து மாலைப்பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றதே,இந்தக் காலமாகிய நோய்.


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

(1228)

விளக்கம்:

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும்படையாக வருகின்றதே.


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

(1229)

விளக்கம்:

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே இந்த ஊரும் மயங்கியதாய் என்னைப் போலத்துன்பத்தை அடையும்.


பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

(1230)

விளக்கம்:

பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகமால் நின்ற என் உயிரானது இம் மாலைப்பொழுதிலே நலிவுற்று மாய்கின்றதே.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X