For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

29. கள்ளாமை

By Staff
Google Oneindia Tamil News

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

(281)

விளக்கம்:

உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்.


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
கள்ளத்தாற் கள்வேம் எனல்.

(282)

விளக்கம்:

பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம் என்று, ஒருவன். தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவுக்கூடத் தீமையானதே.


களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

(283)

விளக்கம்:

களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல் எல்லாம் வந்தது போல விரைந்து ஒழிந்தும் விடும்.


களவின்கண் கன்றிய காதல் வினைவின்கண்
வீயா விழுமம் தரும்.

(284)

விளக்கம்:

களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும்.


அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

(285)

விளக்கம்:

பொருள் தேடுதலையே. நினைத்துப் பிறர் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையராதல்.சான்றோரிடம் இல்லை.


அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

(286)

விளக்கம்:

களவுநெறியின் கண் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லாரும், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே.


களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

(287)

விளக்கம்:

களவு எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது. அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒரு போதும் இல்லை யாகும்.


அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

(288)

விளக்கம்:

அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே அறம் நிற்பது போல, டுளவுத் தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே வஞ்சகம் எப்போதும் நிலைத்திருக்கும்.


அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

(289)

விளக்கம்:

களவு அல்லாத பிற நல்ல ணியற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவுகடந்த செலவுகளைச் செய்து அக் களவாலே அழிவார்கள்.


கள்வர்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேன் உலகு.

(290)

விளக்கம்:

களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும், காலமும் தவறிப் போகும்: களவு செய்யாதவர்களுக்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X