For Daily Alerts
Just In
கார்மேகம்!
- விஜயா கிப்ட்சன்
தேவதை நீயுன்னு
ஓயாமச் சொல்லி சொல்லி
உசுரெல்லாம் பறிச்சுக்கிட்டு
ஒய்யாரமா கிளம்பீட்ட !
பரிசென்ன வேணுமுன்னு
பகுமானமா நீ கேக்க
வேறொன்னுந் தோணலையே
ஒங்கண்ணுக்கு முன்னால!
அக்கரையில சோலியோ?
ஆபீசர் கூப்ட்டாரோ ?
அடுக்கடுக்கா ஒன்னினைப்பு
அக்கினியா வாட்டுதைய்யா!
ரையிலுலதான் வருவீரோ? -நாள
ராத்திரிக்கு வருவீரோ ?
ராப்பகலா ஒறங்கவிடாத
ரசவாதம் ஒன்னேசம் !
வானத்தப் பாத்து நின்ன
வயக்காட்ட மாதிரியே
நேரம் போகாம
நொடிஞ்சுத்தான் காத்திருக்கேன் !
வளவளன்னு நான் பேச
வண்டி வண்டியா நீ சிரிக்க
வஞ்சனையில்லா ஒம்முத்தம்
மட்டும் வழியிதுன்னும் கன்னத்துல....!
Comments
English summary
A poem on the angel by writer Vijaya Giftson.