Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீரங்கம்: நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள் - பகவான் படியளப்பது ஏன் தெரியுமா

பகவான் எல்லாருக்கும் படி அளக்கிறான் என்று வழக்கில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆண்டுக்கு ஏழு முறை படியளக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கம்: கணவனின் சரிபங்கான மனைவிக்கு, எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று, நமக்கு உணர்த்துவதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் 7ஆம் திருநாளன நெல்லளவு திருநாளன்று ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளினார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. மகாவிஷ்ணுவின் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது.

Srirangam Oonjal Utsavam namperumal nel alavai

மூலவர் ஸ்ரீரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப சன்னதிகளும் உள்ளன. பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உங்களவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில்.

இந்த ஆலயத்தில் சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவைத் திருநாள் நடைபெற்று வருகிறது. மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.

Srirangam Oonjal Utsavam namperumal nel alavai

ஸ்ரீரங்கத்தில் ஊஞ்சல் உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழாம் நாளன்று நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள். நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நம்பெருமாள் எழுந்தருளினார். இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு. செலவு எவ்வளவு மீதி இருப்பு எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்க்க தன்னுடன் இரண்டு தேவியரையும் சேர்த்தழைத்துக் கொண்டு வருகிறார் நம்பெருமாள்.

பட்டு வேஷ்டி; அங்கவஸ்திரம் அணிந்து, ஸ்ரீதேவி - பூதேவியர் இருவரும் பட்டாடை உடுத்தி உடன் வர, பக்தர்கள் புடைசூழ, வெளிப்பிரகாரமான இராஜமகேந்திரன் திருச்சுற்றில் பவனி வந்தார் நம்பெருமாள். ஆர்யபட்டாள் வாசல் வழியே வந்து, செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு, நாலு கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது பாசிப் பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டது.

செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிச்சாரகம் செய்பவர், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து நம்பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்விக்கப்படுகிறது.

கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல் அளந்து கொட்டி பெருமாளுக்கு கணக்கு கூறுகிறார். 'திருவரங்கம்' எனச் சொல்லி, முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து 'பெரிய கோயில்' எனக் கூறி, இரண்டாவது மரக்கால் நெல்லை அளக்கிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது, 'நிரவி விட்டு அள' என்று. ஸ்தானி கர்தான் குரல் கொடுக்கிறார். 'சரியாக அளந்து போடு' என்று பெருமாளே கட்டளையிடுவதாக ஐதீகம்.

Srirangam Oonjal Utsavam namperumal nel alavai

அந்தக் காலத்திலிருந்து எல்லாமே எம்பெருமாளின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் திருக்கொட்டாரத்திலிருந்துதான் எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக் கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன.

நாடு செழிக்கவும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் தானிய உற்பத்தியும் சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள். உலகம் யாவுக்கும் படியளப்பவர் பெருமாள். மரக்கால் மூலம் நெல் அளந்து கூறப்படுகிறது.

ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி. எனக் கூவிக் கூவி அளந்து போடப்படுகிறது. தன் நேரடிப் பார்வையில் நெல் அளவை கண்ட நம்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் இணைந்து உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருக்கொட்டாரத்தில் எழுந்தருளி நெல்அளவை கண்டருளினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+