21 ஆண்டுகள் இழுத்தடித்த சொத்துக் குவிப்பு வழக்கு.. இறுதி தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்
21 ஆண்டுகள் இழுத்தடித்த சொத்துக் குவிப்பு வழக்கு.. இறுதி தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்
சென்னை: தமிழக அரசியல் சூழலில் 21 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு இன்று இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.
1991 முதல் 1996ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக சென்னை செசன்சு கோர்ட்டில் 1996ம் ஆண்டு ஜுன் மாதம் சுப்பிரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.

சுமார் 18 ஆண்டுகளாக ஜெயலலிதா தரப்பால் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.
அதிர்ந்து போன அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரும், சிறையில் இருந்தவாரே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தப்பு தப்பாக கணக்கை போட்டு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. அதனுடன், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
எனினும், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 21 ஆண்டில் இன்று சசிகலாவை குற்றவாளி என்று தீர்ப்பெழுதப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் சூழலில் பல மாற்றங்களை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications