மெக்காவில் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி.. 7 மாதங்களுக்கு பிறகு தடை தளர்த்தும் சவுதி அரேபியா..!
ரியாத்: இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் உம்ரா செய்வதற்கு வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி அளித்துள்ளது சவுதி அரேபியா அரசு.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தியுள்ளது சவுதி அரேபியா.

சவுதி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா கால கடும் நிபந்தனைகளை ஏற்று 10,000 வெளிநாட்டு யாத்ரீகர்கள் முதற்கட்டமாக உம்ரா செய்வதற்கு மெக்காவுக்கு வரவுள்ளார்கள். இதனிடையே அவர்கள் அனைவரும் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உடல்நிலை கண்காணித்த பின்னரே மெக்காவிற்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
இந்த தகவலை சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார துணை அமைச்சர் அமர்-அல்-மத்தா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், உம்ராவுக்காக மெக்கா வரும் வெளிநாட்டு யாத்ரீகர்கள் 10 நாட்கள் வரை மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவலுக்கு முன்பு மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள 1,300 தங்கும் விடுதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான உணவு விடுதிகள் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தன. ஆனால் கடந்த மார்ச் மாதம் முதலே அவைகள் அனைத்தும் படிப்படியாக முடங்கிவிட்டன. தற்போது மீண்டும் யாத்ரீகர்களுக்கு படிப்படியாக அனுமதி தரப்பட்டு வருவதால் மீண்டும் ஹோட்டல்கள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
இதனிடையே கஹ்ஃபா எனப்படும் கருப்பு நிறத்திலான புனித கட்டிடத்தைத் தொட சிறிது காலம் யாத்ரீகர்களுக்கு அனுமதி இல்லை என சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தின் நிலைமைக்கேற்ப மேலும் சில தடைகளை சவுதி அரசாங்கம் தளர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications