மணிப்பூர் தனிநாடு கோரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் 18 பேருக்கு சிறைதண்டனை
இம்பால்: மணிப்பூர் தனிநாடு கோரும் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் ஆர்.கே. மேகென் என்ற சனயாய்மாவுக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அத்துடன் அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்கள் 17 பேருக்கு 7 முதல் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நாடு விடுதலை அடைந்த போது மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. 1949-ம் ஆம் ஆண்டு மணிப்பூர் மகாராஜாவும் அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் அப்பகுதி இணைந்தது.

ஆனால் இதற்கு மணிப்பூரில் எதிர்ப்பும் கிளம்பியது. இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக 1964-ம் ஆண்டு யு.என்.எல்.எஃப் என்ற பிரிவினைவாத இயக்கம் உருவானது. மணிப்பூர் சுதந்திரமான சோசலிச தனிநாடாக உருவாக வேண்டும் என்பது இதன் கொள்கை.
1990களில் இந்த அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கியது. இதற்காக மணிப்பூர் மக்கள் ராணுவம் என்ற ஆயுத இயக்கத்தைக் கட்டமைத்தது. இதனால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு வங்கதேசத்தில் பதுங்கியிருந்தபோது யு.என்.எல்.எப். தலைவர் ஆர்.கே. மேகென் என்ற சனயாய்மா கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் மீது இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டுகளின் கீழ் தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்குப் பதிவு செய்து. மேலும் யு.என்.எல்.எஃப் இயக்கத்தின் 17 மூத்த தலைவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்குகள் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டன.
இதில் ஆர்.கே. மேகென் என்ற சனயாய்மாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பட்டாச்சார்யா தீர்ப்பளித்தார். எஞ்சிய 17 தலைவர்களுக்கும் 7 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரி நீண்டகாலமாக போராடி வரும் இயக்கம் இதுதான். அப்படி போராடுகிற இயக்கங்களின் தலைவர்கள் தண்டிக்கப்படுவதும் இதுதான் முதல்முறையாகும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications