எந்த மதத்திற்கு எதிராகவும் வன்முறையை என் அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடி
டெல்லி: எந்த மதத்திற்கு எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்துவிட என் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் மற்றும் கன்னிகாஸ்திரி யூப்ரேசியா ஆகியோருக்கு அண்மையில் வாடிகன் நகரில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து இறந்த அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது டெல்லியில் உள்ள விக்யன் பவனில் நடந்த விழாவில் கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

மகிழ்ச்சி
குரியகோஸ் மற்றும் யூப்ரேசியாவுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதை நினைத்து நாடே பெருமைப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மதங்கள்
அனைத்து மதங்களையும் சமமாக மதித்து நடக்கும் பழக்கம் இந்தியாவில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. சம மரியாதை என்பது அனைத்து இந்தியர்களின் மரபணுவிலேயே உள்ளது.

மத்திய அரசு
எந்த மத அமைப்பும் அது பெரும்பான்யினருடையதோ அல்லது சிறுபான்மையினருடையதோ பிறருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்த என் அரசு ஒருநாளும் அனுமதிக்காது. எந்த மத அமைப்புக்கு எதிராகவும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதை ஏற்க முடியாது. அத்தகையவர்கள் மீது என் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். நான் வன்முறையை கடுமையாக கண்டிப்பவன்.

உரிமை
தங்களுக்கு பிடித்த மதத்தில் இருக்க அல்லது பிடித்த மதத்திற்கு மாற அனைவருக்கும் உரிமை உள்ளது.

பாரத மாதா
பாரத மாதா பல மதங்களுக்கு பிறப்பு கொடுத்துள்ளார். அதில் சில இந்திய எல்லையைத் தாண்டி பயணம் செய்துள்ளது என்றார் மோடி.

டெல்லி பள்ளி
தெற்கு டெல்லியில் உள்ள கிறிஸ்தவ பள்ளி தாக்கப்பட்ட உடன் மோடி டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி மற்றும் உள்துறை செயலாளரை அழைத்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பீகார் தேர்தலின் போது மோடி சொன்ன வார்த்தைகள்.. முடிந்தால் தமிழ்நாட்டிலும் பேசுங்க.. ஸ்டாலின் சவால்! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications