For Daily Alerts
Just In
இறந்தோர் குடும்பத்துக்கு ரூ. 25,000 நிதியுதவி
சென்னை:
விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 நிதியுதவிவழங்குவதாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இந்த சம்பம் குறித்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ள முதல்வர் பலியானோர்குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.25,000 உதவித் தொகையும்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சைஅளிக்கவும் அவர் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்று பார்த்து ஆறுதல்கூறினார்.
arrest chennai government women kilpauk tamilnadu chief minister hooch stanley hospital liquor metro train
Story first published: Saturday, October 6, 2001, 5:30 [IST]