For Daily Alerts
Just In
நெல்லை அருகே 2 ஜீப்புகள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி
நான்குநேரி:
திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை இரவு 2 ஜீப்புகள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலியாயினர்.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு ஜீப் வந்து கொண்டிருந்தது. எதிர்த் திசையில் நாகர்கோவிலுக்குமற்றொரு ஜீப் சென்று கொண்டிருந்தது.
நான்குநேரி அருகே மரூகால்குறிச்சி விலக்குப் பகுதியில் இரண்டு ஜீப்புகளும் நேருக்கு நேர் பயங்கரமாகமோதின.
இவ்விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சடையன்குளத்தைச் சேர்ந்த கா. அய்யாவு (55), நல்லூரைச் சேர்ந்த வே.அய்யப்பன் மற்றும் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த மா. அய்யப்பன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
தக்கலையைச் சேர்ந்த ரா. செல்லத்துரை (40) இவ்விபத்தில் பலத்த காயமடைந்தார். மேலும் சிலர் லேசானகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Story first published: Wednesday, October 31, 2001, 5:30 [IST]