லஷ்கர் அமைப்பின் தலைவனை கைது செய்தது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ்முகம்மது சயீத் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் தீவிரவாத அமைப்பும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது என்ற தீவிரவாத அமைப்பும்தான் நாடாளுமன்றத் தாக்குதலில்ஈடுபட்டன என்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்து விட்டது.
இருந்தாலும் பாகிஸ்தான் இச்சம்பவம் தொடர்பாக அவ்வமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல், உள்நாட்டுகாரணங்களைக் காட்டி அவர்களைக் கைது செய்து வருகிறது.
ஜெய்ஷ் அமைப்பின் தலைவனான மெளலானா மசூத் அஸாரையும் பாகிஸ்தான் ஏற்கனவே கைது செய்து விட்டது.
இதிலிருந்து பாகிஸ்தான் இன்னும் இந்தியாவின் விரோதப் போக்கைச் சம்பாதித்துக் கொண்டுள்ளது தெரியவருகிறது.
டெல்லியில் லஷ்கர் தீவிரவாதி கைது:
இதற்கிடையே லஷ்கர் அமைப்பு தீவிரவாதி ஒருவனை டெல்லி போலீசார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைதுசெய்தனர்.
அவனிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. புத்தாண்டு தினத்தன்று அவன் டெல்லியில்தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.