For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி போர் வராது: புலிகள், இலங்கை அரசு உறுதி

By Staff
Google Oneindia Tamil News

ஓஸ்லோ (நார்வே):

இலங்கையில் இனிமேல் போர் எதுவும் வராது என்று ஓஸ்லோவில நடைபெற்ற நிதி திரட்டும் மாநாட்டில்விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் உறுதி அளித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் பகுதிகளில் சீரமைப்பு பணிகளுக்கானநிதி திரட்டும் மாநாடு நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் நடைபெற்றது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அவைமிகுந்த சிரமங்களுக்கிடையில் தான் இந்த மாநாட்டில் வந்து கலந்து கொண்டன.

இருந்தாலும் அந்த நாடுகள் புலிகளையும் இலங்கை அரசையும் அறிவுறுத்துவதற்குத் தயங்கவில்லை.இலங்கையில் முழு அமைதி திரும்ப இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் என்றுஅமெரிக்காவும் இங்கிலாந்தும் கேட்டுக் கொண்டன.

மாநாட்டில் பேசிய விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம், இலங்கைத்தமிழர்களுக்கு முழு பாதுகாப்பும், அனைத்து உரிமைகளும் கிடைக்குமானால் போர் என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்று கூறினார்.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் இதே தொணியில் தான் பேசினார். அடுத்த ஆண்டுக்குள் இலங்கைஇனப் பிரச்சனை முழுவதுமாக ஒடுக்கப்பட்டு விடும் என்றார் அவர்.

இதற்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 39 நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, சுமார் ரூ.350 கோடிக்கான நிதி உதவியை வடக்கு, கிழக்கு இலங்கையின் சீரமைப்புப் பணிகளுக்குத்தருவதாக அறிவித்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X