பெண் புலிகள் விவகாரம்: சந்திரிகா கொடும்பாவி எரிப்பு
கொழும்பு:
பெண் புலிகள் பெல்ட் அணியக் கூடாது என்று கூறி அதை அவிழ்த்த ராணுவத்தினரையும் அவர்களைத் தூண்டிவிட்ட அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவையும் எதிர்த்து இலங்கையின வட-கிழக்குப் பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
ஆயிரணக்கான பெண்களும், ஆண்களும் இன்று சந்திரிகாவின் கொடும்பாவியை எரித்து ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினர்.
போர் நிறுத்த உடன்படிக்கையின்படி ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகள் நுழையும்போது சாதாரண உடைஅணிந்து தான் வர வேண்டும், புலிகளுக்கான சீருடையில், ஆயுதங்கள் வரக் கூடாது என்று தடை உள்ளது.
அதை புலிகள் மதித்து வருகின்றனர். இந் நிலையில் சாதாரண உடையில் (பேண்ட், சர்ட்டில்) ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ்பாணத்தின்மணிப்பே என்ற பகுதியில் நுழைந்த பெண் புலிகளை ராணுவத்தினர் தடுத்தனர். ஏன் பெல்ட் கட்டியிருக்கிறீர்கள் என்று கேட்டனர். அதைஅவிழ்க்கவும் முயன்றனர்.
அப்போது பெண் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் மூண்டது. புலிகளின் கோபத்தை உணர்ந்த ராணுவத்தினர் அந்தபெண் புலிகளை தொடர்ந்து பெல்ட் அணிந்து செல்ல அனமதித்தனர்.
ராணுவத்தினரின் இந்த அடாவடி செயலுக்கு புலிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவினரும்இலங்கை ராணுவத்தினரின் இச் செயலை கண்டித்துள்ளனர். சாதாரண பேண்ட் மீது பெல்ட் கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை, அவர்கள்போர் உடையில் வரவில்லை என்று நார்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் ராணுவத்தினருக்கும் சந்திரிகாவுக்கும் எதிராக இன்று யாழ்பாணத்தில் பெரும் போராட்டம் நடந்தது. சுமார் 8,000 பேர்இன்று யாழ்பாணத்தில் கூடி சந்திரிகாவின் கொடும்பாவியை எரித்தனர்.
இந்தப் பகுதியின் ராணுவ கமாண்டர் சரத் பொன்சேகாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என விசுதலைப் புலிகள் இயக்கம் எச்சரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications