மதுரை இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றிதிமுக-50994: அதிமுக-19909: தேமுதிக-17394
மதுரை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் 31,085 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் துவக்கம் முதலே திமுக வேட்பாளர் கெளஸ் பாட்சா முன்னிலையில் இருந்து வந்தார்.
பல சுற்றுக்கள் நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கெளஸ் பாட்சா 50994 வாக்குகளைப் பெற்றார்.
அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா 19909 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக வேட்பாளர் பன்னீர்செல்வம் 17394 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப்பிடித்தார். போட்டியிட்ட 13 சுயேச்சைகள் டெபாசிட் இழந்தனர்.
திமுகவைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல்ராஜனின் மறைவைத் தொடர்ந்து கடந்த 11ம் தேதி இங்கு இடைத்தேர்தல் நடந்தது.
மொத்த வாக்காளர்களான 1.32 பேரில் 90,887 பேர் வாக்களித்தனர். இது 68.72 சதவீத வாக்குப் பதிவாகும். இந்தத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. மருத்துவக்கல்லூரியின் பயோ கெமிஸ்ட்ரி துறை அறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்குஎண்ணிக்கையையொட்டி அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மொத்தம் 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு மேசையிலும் ஒருமேற்பார்வையாளர், 3 ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 10.30 மணிக்கு முடிந்துவிட்டது.
வாக்கு எண்ணிக்கையையொட்டி மருத்துவக் கல்லூரி வளாகத்தைச் சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் ஏராளமான அளவில்குவிக்கப்பட்டுள்ளனர். திமுக, அதிமுக, தேமுதிகவைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளதால் பெரும்பரபரப்பு நிலவியது.
தேர்தல் பார்வையாளர்கள் மாற்றம்:
இதற்கிடையே மதுரையில் திமுக, அதிமுகவினர் இடையே பெரும் மோதல் நடந்த போது சுற்றுலா சென்று விட்டதாக சர்ச்சையில் சிக்கிய இரு தேர்தல்பார்வையாளர்களும் திரும்ப அழைக்கப்பட்டு விட்டனர்.
இருவரில் ஒருவரான மீனா, ராமேஸ்வரத்திற்கும், இன்னொருவரான சஞ்சீவ் குமார் தேக்கடிக்கும் சுற்றுலா போயிருந்தனர். இது பெரும் சர்ச்சையைஎழுப்பியது. இதைத் தொடர்ந்து இருவரையும் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இருவரும் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல்ஆணையத்தின் சிறப்பு கூடுதல் பார்வையாளராக கேரளாவைச் சேர்ந்த மாஹி என்பவர் செயல்படுவார் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாதெரிவித்துள்ளார்.
இறுதி வாக்கு விவரம்:மொத்த வாக்குகள்: 1,32,251
பதிவானவை: 90,887
கெளஸ் பாட்ஷா (திமுக) - 50,994.
ராஜன் செல்லப்பா (அதிமுக) - 19,909.
பன்னீர் செல்வம் (தேமுதிக) - 17,934.
வாக்கு வித்தியாசம்: 31,085.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications